உடுமலை, ஜூன் 24- உடுமலை அரசு மருத்துவம னையை 24 மணி நேரமும் செயல்ப டும் மருத்துவமனையாக மாற்ற நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடு மலை நகரக்குழு சார்பில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடுமலை நகரின் முக்கிய பகுதி யில் அமைத்துள்ள அரசு மருத்துவ மனையில் தினமும் ஆயிரக்கணக் கான பொதுமக்கள் சிகிச்சை பெற வருகிறார்கள். ஆனால் இந்த மருத்து வமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் இருப்பதால், சிறிய சிகிச்சை பெற வேண்டும் என்றாலும் கோவைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மருத்துவமனை யில் சிறப்பு அறுவை சிகிச்சை மற்றும் ஆய்வகம் அமைக்க வேண்டும். மேலும் மக்கள் பயன்படும் வகையில் 24 மணி நேரமும் செயல்பட நடவ டிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத் துவமனைக்கு எதிரில் நகராட்சி நிர் வாகத்திற்கு சொந்தமான இடத்தை தனியார் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அப்புறப்படுத்தி, மருத்துவமனை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண் டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப் பட்டன. முன்னதாக உடுமலை நகரச்செய லாளர் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்ட செயலாளர் செ.முத் துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதணன், மாவட்டக்குழு உறுப்பினர் அ.பஞ்ச லிங்கம் மற்றும் நகரக்குழு உறுப்பி னர்கள் விஸ்வநாதன், தோழன் ராஜா, வசந்தி, சித்ரா, ஜகாங்கீர், கருப்புசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டார்கள்.