districts

img

மின் கட்டண உயர்வுக்கு எதிராக தாராபுரத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 26- தமிழக அரசு உயர்த்தி உள்ள மின்சார கட்டண உயர்வு  சாமானிய மக்களுக்கும், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங் களுக்கும் சுமையை அதிகரிக்கும் என்பதால், மின் கட்டண  உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. தாராபுரம் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவல கம் முன்பு வியாழனன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம்  தாலுகா குழு உறுப்பினர் எஸ்.சதீஸ்வரன் தலைமை ஏற்றார்.  மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கட்சியின் தாராபுரம் வட்டச் செயலாளர் என்.கனகராஜ், தமுஎகச சார்பில்  மணியன், சிஐடியு நிர்வாகி பொன்னுசாமி ஆகியோர் கலந்து  கொண்டு உரையாற்றினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.