தருமபுரி, நவ.15- பொதுமக்களின் அடிப்படை பிரச் சனைகளை வலியுறுத்தி, தருமபுரி மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி ஒன்றியம், இலக்கியம் பட்டி ஊராட்சிக்குட்பட்ட 4 ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வாரி நீர்நிலைகளை பாதுகாக்க வேண் டும். முதல்வரால் அறிவித்து, இன் னும் துவங்கபடாமல் உள்ள வெண் ணாம்பட்டி ரயில்வே மேம்பாலப் பணிகளை துவங்க வேண்டும். சனத் குமார் நதியில் கழிவுநீர், சாயப்பட் டறை நீர் கலப்பதை தடுக்க வேண் டும். நீண்ட காலம் புறம்போக்கில் குடி யிருப்போருக்கு மனைப்பட்டாவும், அனுபவ நிலத்திற்கு நிலப்பட்டாவும் வழங்க வேண்டும். தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யான காவிரி உபரிநீர் திட்டத்தை உட னடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும், “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக் கையை கைவிட வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்கி, வேலை யின்மையை போக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று தருமபுரி மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அதன்ஒருபகுதியாக, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே. கோவிந்தசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, எஸ்.கிரைஸாமேரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் அருகே, சிபிஎம் வட்டச் செயலாளர் சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வே.விசு வநாதன், ஆர்.சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், லோகநாதன் நன்றி கூறினார். இதே போன்று, பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே, சிபிஎம் பகுதிச் செயலாளர் ஆ.ஜீவானந்தம் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் வி.மாதன், வி.ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.