நாமக்கல், பிப்.14- பழுதடைந்த சாலையை சீர மைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் காத்தி ருப்புப் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், ஆயில் பட்டி வரை செல்லும் ஊராட்சி ஒன் றிய சாலையை உடனடியாக செப்ப னிட்டு தார் ஊற்ற வலியுறுத்தியும், தேக்கல்பட்டி 3 ஆவது சாலை முதல் மலையாளபட்டி ஆயில் மரத்துமேடு வரை செல்லும் சாலை, மந்தக்காடு கும்பப்புளியா முதல் சின்னகிநாறு பாலம் வரை செல்லும் பஞ்சாயத்து சாலைகளை செப்பனிட்டு, தார் ஊற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் புதனன்று கருங் கல்பட்டி ரேஷன் கடை அருகே தொடர் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன் தலைமையில் நடை பெற்ற இப்போராட்டத்தில், கட்சியின் வாழப்பாடி தாலுகாச் செயலாளர் வீ. தங்கவேல் துவக்க உரையாற்றினார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் நாம கிரிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் கே.சின்னசாமி, வாழப்பாடி தாலுகாக் குழு உறுப்பினர் பழனிமுத்து, தேக் கல்பட்டி ஊராட்சி முன்னாள் தலை வர் கே.நடேஷ் கவுண்டர், ஊர் பெரி யவர்கள் முருகேசன் வெங்கடாச லம், ஆனந்தன், அண்ணாமலை, சண் முகம், ஜி.வெங்கடாசலம் உள்ளிட் டோர் உரையாற்றினர். இந்த காத்திருப்புப் போராட்டத் தையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக் களிடம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கே.யசோதா, உதவி செயற்பொறி யாளர் ஆர். பார்கவி, பணி மேற்பார் வையாளர் எஸ்.கீதாராணி தேக்கல் பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா, ஆகியோர் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை யில் மார்ச் மாத இறுதிக்குள் மேற் கண்ட சாலைப்பணிகளுக்கான டெண் டர் கோருவதற்கு நடவடிக்கை எடுப்ப தாகவும் ஆகஸ்ட் மாதத்திற்குள் சாலைப் பணியை முழுமையாக முடித்து விடுவதாகவும் எழுத்துப்பூர் வமாக உறுதி அளித்தனர். இதனை யேற்று போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.