சேலம், டிச.22- அம்பேத்கரை அவமதித்த ஒன் றிய அமைச்சர் அமித்ஷாவின் உரு வப்படத்தை எரித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். மாநிலங்களவையில் அம்பேத் கரை அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமித்ஷாவை கைது செய்ய வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை திரும் பப்பெற வேண்டும். சர்வதேச ஊழல் குற்றவாளி அதானிக்கு துணை போகக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்ஒருபகுதி யாக சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியக்குழு சார்பில், ஜலகண்டா புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் ஆர்.கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட் டச் செயலாளர் மேவை.சண்முக ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் கள் கே.ராஜாத்தி, ஜி.கவிதா. ஒன் றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, கலந்து கொண்டவர்கள் அமித்ஷாவின் உருவப்படத்தை எரித்து, எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதேபோன்று, கொங்கணாபுரம் பேருந்து நிலை யம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சிபிஎம் ஒன்றியச் செய லாளர் எஸ்.முத்துசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செய லாளர் மேவை.சண்முகராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மு.பெரியண்ணன், டி.செல்வம் உட் பட பலர் கலந்து கொண்டனர். ஓம லூர் பேருந்து நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் என். ஈஸ்வரன், எம்.பெரியண்ணன், வி. வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நீலகிரி நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி திடல் பகுதியில் சிபிஎம் தாலுகாச் செயலாளர் நவீன்சந்திரன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தாலுகா உறுப்பினர் சுரேஷ் துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.சங்கர லிங்கம் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் ஆமினா உட்பட பலர் கலந்து கொண்டனர்.