districts

img

மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 24- தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து சேலம், வேம்படிதாளம் மின்வாரிய அலுவலகம் முன்பாக புதனன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழக அரசு உயர்த்திய மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மின்சார கட்டணத்தை உயர்த்தி ஏழை எளிய மக்களின் வாழ்வாதார செலவினங்களை உயர்த்தக்கூடாது என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.  வேம்படிதாளம் கிளைச் செயலாளர் பி.ராஜேந்திரன், அய்யம்பாளையம் கிளைச் செயலாளர் எஸ்.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.  இதில், செயலாளர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட குழு உறுப்பினர் டி.பரமேஸ்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில் திருவளிப்பட்டி, வேம்படிதாளம், அய்யம்பாளையம் கிளைகளை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.