தாராபுரம், ஜூன் 5- குடிநீர், சாக்கடை, சுகாதாரம் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைக ளுக்கு தீர்வு காணாத கவுண்டச்சிபுதூர் ஊராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியை கண் டித்து கவுண்டச்சிபுதூர் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சீரங்கராயன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, கவுண் டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட வசந்தம் நகர், எஸ்.பி.நகர், எம்பிஎஸ் காலனி பகுதிகளுக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும். ஜெய்க ணேசா நகர், ஆப்பிள் ரெசிடென்சி, கேஎஸ்கே நகர் பகுதிகளுக்கு பொது குடிநீர் அமைப்பு ஏற்படுத்தி தரவேண்டும். சம்பத்நகர், பாத் திமா நகர், கண்ணகி நகர் ஆகிய பகுதி களில் சட்டவிரோத குடிநீர் இணைப்பை துண் டித்து அனைத்து மக்களுக்கும் சீராக குடிநீர் வழங்கவேண்டும்.
எம்பிஎஸ் காலனியில் உள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியை உயர்த்தி வேண்டும். பிசப்தார்ப் கல் லூரியில் இருந்து எம்எம் நகர் வரை உள்ள குப்பைகளை அகற்றி, நிரந்தர தீர்வு காண வேண்டும். குமரன் நகர், காந்தி நகர், வசந்தம் நகர், சிபி கார்டன் பகுதிகளுக்கு சாக்கடை வசதி செய்து தரவேண்டும். அலங்கியம் ரோடு ராம் நகரில், சாக்கடை தூர்வார நடவ டிக்கை எடுக்கவேண்டும். குமரன் நகரின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளுக்கு கூடுத லாக தெருவிளக்கு அமைத்து தரவேண்டும். புதிதாக 300 மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை அமைத்து தரவேண்டும். என்எம்எல் நகரில் குறுக்குச்சாலை அமைத்து தரவேண்டும். ராம்நகரில் பழுதடைந்துள்ள தார் சாலையை புதுப்பித்து தரவேண்டும்.மழைக்காலங் களில் பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து முற்றிலும் முடங்கி போவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் தாலூக்கா செயலாளர் என்.கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பி.பொன்னுச்சாமி, கி.மேக வர்ணன், செங்குட்டுவன், என்.முத்துசாமி, கண்ணுசாமி, கோவிந்தராஜ், ஆ.மணியன், பாரதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.