திருப்பூர், மார்ச் 27 - ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தெருமுனை பிரச்சாரம் ஊத் துக்குளி தாலுகாவில் திங்களன்று நடை பெற்றது. வேலையின்மை, விலைவாசி உயர்வு, வறுமை, மக்கள் வாழ்வாதரங்கள் மீது தொடர் தாக்குதல் என ஒன்றிய அரசின் தொடர் தாக்குதல், பாஜக அல்லாத மாநில அரசுக ளுக்கு எதிராக மாநில உரிமைகளை வெட்டிச் சுருக்கி பறிப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மார்ச் 27, 28 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு தெருமுனை கூட்டங்கள் நடத்த மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறைகூவல் விடுத்திருந்தது. ஊத்துக்குளி தாலுகா அதன்படி திங்களன்று மாலை 4 மணிக்கு ஊத்துக்குளி தாலுகா, புலவர்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தெருமுனை பிரச்சார இயக்கம் துவங்கியது. எம்.தொட் டிப் பாளையம், தென்றல் நகர், சொட்ட கவுண் டம்பாளையம், ராஜீவ்நகர், தெற்கு சாணார் பாளையம், பல்லகவுண்டன்பாளையம் நால் ரோடு, கூனம்பட்டி, கூனம்பட்டி புதூர் காலனி, ஆலம்பாளையம், வேப்பம்பாளையம் பாச் சாங்காட்டுபாளையம், சுக்காகவுண்டன் புதூர் காலனி, செங்காளிபாளையம், சுண்டக் காம்பாளையம், எம்.ஜி.ஆர்.காலனி தாளப் பதி, விருமாண்டம்பாளையம் செங்கப் பள்ளி வரை மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடை பெற்றது. கட்சியின் ஊத்துக்குளி தாலுகா குழு உறுப்பினர் வி.காமராஜ் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுக்கா குழுச் செயலாளர் எஸ்.கே.கொளந் தசாமி, தாலுகா குழு உறுப்பினர் ஆர்.மணி யன் மற்றும் சிவராஜ், சந்திரமூர்த்தி, அர்ஜு னன், லிங்கப்பன், நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் தெற்கு ஒன்றியம்
திருப்பூர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் புதூர் பிரிவு, வள்ளியம்மை நகர், நல்லூர் மற்றும் வீரபாண்டி, முருகம் பாளையம், இடுவம்பாளையம் ஆகிய ஆறு மையங்களில் மக்கள் சந்திப்பு தெருமு னைப் பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. ஒன் றியச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் பா.லட்சுமி, பொதுத் தொழிலா ளர் சங்கச் செயலாளர் என்.சுப்பிரமணியம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், சண்முகம், சி.சுப்பிரமணியம், ஜானகி, கருப் பசாமி மற்றும் சி.டி.சி. துரைசாமி, ரவிச்சந் திரன் உள்ளிட்டோர் பங்கேற்று மக்களிடம் பிரச்சாரம் செய்தனர்.
வடக்கு மாநகரம்
திருப்பூர் வடக்கு மாநகரத்தில் குமரா னந்தபுரம் மருதாசலபுரம் சாலையில் திங்க ளன்று மாலை நடைபெற்ற தெருமுனைப் பிரச்சார கூட்டத்திற்கு மாநகரக்குழு உறுப் பினர் எஸ்.ராஜேந்திரன் தலைமை ஏற்றார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், மாநகரச் செயலாளர் பி. ஆர்.கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலி, மாநகரக்குழு உறுப்பினர் ஒய். அன்பு ஆகியோர் உரையாற்றினர். அனைத் துப் பகுதிகளிலும் குற்றவாளி கூண்டில் அதானி-மோடி என்ற பிரசுரம் மக்கள் மத்தி யில் விநியோகம் செய்யப்பட்டது.