தருமபுரி, மே 23- பாலக்கோடு பேரூராட் சியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்ககோரி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக மார்க் சிஸ்ட் கட்சியின் வட்ட செய லாளர் கோவிந்தசாமி தலை மையில் பேரூராட்சி தலை வர் பி.கே.முரளியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தரும புரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 126 தெருக்களை கொண்ட இப்பேரூராட்சியில், சுமார் 10 ஆயிரம் வீடுகள் உள்ளது. இங்கு வசிக் கும் பெரும் பகுதி மக்கள் ஏழை மக்களா கும். இங்குள்ள பல்வேறு வார்டு பகுதிக ளுக்கு ஒகேனக்கல் குடிநீர் வருவதில்லை. பேரூராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரா னது பயன்படுத்த முடியாத அளவிற்கு உப்பு நீராக உள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலநி லைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.எனவே பேரூ ராட்சி நிர்வாகம் அனைத்து வார்டுகளுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, இம்மனுவினை அளிக்கை யில், சிபிஎம் வட்டக்குழு உறுப்பினர்கள் பாண்டியம்மாள் கார்ல் மார்க்ஸ், கிளை செயலாளர் தேவராஜ் ஆகியோர் உடனிருந் தனர்.