districts

img

சாலை செப்பனிட கோரி சிபிஎம் மனு

திருப்பூர், மே 9-  பழுதடைந்துள்ள சாலைகளை செப்பனிட்டுத் தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, ஊராட்சி மன்றத் தலை வரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றி யம், சுண்டக்காம்பாளையம் ஊராட்சி, வெங்கடாச லபதி நகர் பகுதி சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப் படுகின்றன. இந்த சாலையில் சரளை கற்கள் பெயர்ந்து,  குண்டும், குழியுமாக வாகனங்கள் தடுமாற்றத்துடன் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, இந்த சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர். பின்னர், சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திங்களன்று மக்களிடம் கையெ ழுத்துப் பெற்ற கோரிக்கை மனுவை ஊராட்சிமன்றத் தலைவர் ஆனந்திடம், மார்க்சிஸ்ட் கட்சியினர் வழங்கி னர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதியூர் கிளை செய லாளர் எஸ்.ரவீந்திரன் தலைமையில், திரளானோர் பங் கேற்றனர். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த் “இன்னும் 10 அல்லது 20 நாட்க ளுக்குள் தார் சாலை போடும் பணி தொடங்கப்படும். விநாயகர் கோயில் மற்றும் கருப்பராயன் கோயில் வீதி களை கான்கிரீட் சாலைகளாக தரம் உயர்த்தி தருகி றோம்” என்று உறுதி அளித்தார்.