districts

img

எல்லப்பாளையம் புதூர் சமத்துவபுரத்திற்கு அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் மனு

திருப்பூர், டிச. 21 - குண்டடம் ஒன்றியம், எல்லப்பாளையம் புதூர் சமத்துவபுரத்திற்கு குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.பாலன், கமிட்டி உறுப்பினர் சிவசாமி, காங்கே யம் தாலுகா குழு உறுப்பினர் தங்கவேல்,  செல்வம் உள்ளிட்டோர் எல்லப்பாளையம் புதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர் சங்கரைச் சந்தித்து  புதனன்று கோரிக்கை மனு அளித்தனர். அதில், எல்லப்பாளையம் புதூர் ஊராட் சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் நூற்றுக் கும் மேற்பட்டோர் வீடு கட்டி குடியிருந்து வரு கின்றனர். இவர்களின் அடிப்படைப் பிரச்ச னையான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி கள் ஏற்படுத்தித் தர வேண்டும். வீட்டு வரி ரசீது  போட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட னர். கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் சங்கர், சமத்துவபுரத்தில் தண்ணீர் தொட்டி ஏற்படுத்தி குடிநீர் விநியோ கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், மற்ற  கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்ப தாகவும் உறுதியளித்தார்.