தாராபுரம், மே 24- தாராபுரத்தில் நடைபெற்ற ஜமாபந் தியில், கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக் கப்பட்டது. மனு மீது நடவடிக்கை எடுக் காவிட்டால் ஜூன் 5 ஆம் தேதியன்று அற வழிப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் தாராபுரம் தாலூகா செயலாளர் என்.கனகராஜ் தலைமையில் ஜமா பந்தியில் தாராபுரம் கோட்டாட்சியர் குமரேசனிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், கவுண்டச்சிபுதூர் ஊராட் சியில் குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வச திகள் நீண்ட நாட்களாக தீர்க்கப்படா மல் உள்ளது.
குறிப்பாக காந்திநகர் மேல்நிலைத் தொட்டிக்கு செல்லும் மெயின் குழாயிலும் சம்பத் நகர், பாத் திமா நகர், கண்ணகி நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக போடப்பட்டுள்ள குடி நீர் இணைப்புகளை உடனடியாக துண் டித்து அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வழங்கவேண்டும். வசந்தம் நகர், எஸ்பி நகர், எம்பிஎஸ் காலனி, ஜெய்க ணேசா நகர், ஆப்பிள் ரெசிடென்சி, கேஎஸ்கே நகர் ஆகிய பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும். பொது குடிநீர் குழாய் அமைக்க வேண் டும். வேலவர் மண்டபத்திற்கு வடபுற மாக குமரன் நகர் செல்லும் நுழைவாயி லில் பேக்கரி கழிவுகள், உடைந்த கண் ணாடி டம்ளர், சாம்பல் போன்றவை கொட்டப்பட்டு நடைபாதை அசுத் தம் செய்யப்படுகிறது. மழைக்காலங் களில் அக்கழிவுகள் சாலை முழுவதும் பரவி துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த கழிவுகளை அகற்றுவதோடு வருங்காலங்களில் கழிவுகள் கொட் டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிசப் தார்ப் கல்லூரியில் இருந்து என்எம்எல் வரை உள்ள தார்சாலையின் இருபுறமும் குப்பைகள் மலை போல் குவிந்துள்ளது. அதை அகற்ற வேண் டும். ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதி களில் தெருவிளக்கு, சாலைவசதி கோரி மனுக்கள் அளிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே உடனடி யாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும், கோரிக்கைகள் நிறைவேற்றபடாவிட்டால் வரும் ஜூன் 5 ஆம் தேதியன்று அறவழிப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.