கோவை, ஜன.23- கோவை மாநகராட்சி பகுதிகளில் அடிப் படை பிரச்சனைகளை தீர்க்கக்கோரி மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக் கம் மாநகரம் முழுவதும் நடைபெற்றது. மாநகர பகுதிகள் குண்டும் குழியுமாக வும், குடிநீர் விநியோகத்தில் பாரபட்சம், ஆங் காங்கே குப்பை மேடுகளால் சுகாதாரம் என்ன விலை என்பது போல் மாநகரம் காட்சியளிக் கிறது. மாதிரி நகரம் (ஸ்மார்ட் சிட்டி) ஒரு மாதிரி நகரமாகவே உள்ளது. கோவை மாநகராட்சியின் திறனற்ற நட வடிக்கை கண்டித்து மக்கள் சந்திப்பு இயக்க மும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துள் ளது. இதன்ஒருபகுதியாக ஞாயிறன்று கோவை மாநராட்சி பகுதிகளில் மக்கள் சந் திப்பு இயக்கம் நடைபெற்றது. முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் பீள மேடு, சிங்கை நகரக்குழுக்கள் இணைந்து ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் துவங் கிய பிரச்சார இயக்கத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மாநாபன் துவங்கி வைத் தார்.
இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் யு.கே.சிவஞானம், வி.தெய்வேந்திரன், வி.சுரேஷ், கே.அஜய்குமார், பீளமேடு நகர செயலாளர் கே.பாண்டியன், மாமன்ற உறுப் பினர்கள், மாநகர மன்ற உறுப்பினர்கள் பூபதி, கண்ணகி ஜோதிபாசு மற்றும் சிங்கை, பீளமேடு நகரக்குழு உறுப்பினர்கள் பங் கேற்றனர். இப்பிரச்சார இயக்கம் பல்வேறு மாநகராட்சி வார்டுகளுக்கு சென்று, செளரி பாளையத்தில் நிறைவடைந்தது. இதேபோல எஸ்.எஸ்.குளம் ஒன்றியத் திற்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் நடை பெற்ற பிரச்சார இயக்கம் ஆர்.ஜி.புதூரில் துவங்கியது. இதில், எஸ்.எஸ்.குளம் கிழக்கு செயலாளர் ஆர்.கோபால், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ், மேற்கு இடைக்குழு செயலாளர் சண்முக சுந்தரம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் வி.ராம மூர்த்தி, சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை மேற்கு, கிழக்கு இடைக்குழு சார்பில் கோவை உக்கடம் பகுதியில் துவங் கிய பிரச்சார இயக்கத்தில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா துவக்கி வைத்தார். இதில், மேற்கு நகர செய லாளர் பி.சி.முருகன் கிழக்கு நகரக்குழு செய லாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். கோவை வடக்கு நகரக்குழு சார்பில் கண பதிபுதூரில் துவங்கியபிரச்சார இயக்கத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய் குமார் துவக்கி வைத்தார். இப்பிரச்சார குழு மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் நடை பெற்றது.