districts

img

வடக்கு ஒன்றியத்தில் சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்

திருப்பூர், செப். 1- மோடி அரசை கண்டித்து திருப்பூர்  வடக்கு ஒன்றிய பகுதியில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் 26 குழுக்கள்  கடந்த 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி  வரை வீடு வீடாக மக்களை சந்தித்து பிரச் சாரம் மேற்கொண்டது.  பிச்சம்பாளையம் புதூரில் ஒன்றிய  குழு உறுப்பினர் எஸ்.பாண்டியன் தலை மையிலும், பெருமாநல்லூரில் ஒன்றிய  குழு உறுப்பினர் பி.கே.கருப்புசாமி  தலைமையிலும், பள்ளிபாளையத்தில் கிளைச் செயலாளர் தனபால் தலைமை யிலும், வாவிபாளையத்தில் கிளைச்  செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை யிலும், அங்கேரிபாளையத்தில் கிளைச் செயலாளர் நரேந்திர பிரசாத் தலை மையிலும் தெருமுனை கூட்டங்கள்  நடைபெற்றன. இதில் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே. காமராஜ்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. ரங்கராஜ், ச.நந்தகோபால், வடக்கு மாந கரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், முன் னாள் ஒன்றிய செயலாளர் கே.பழனிச் சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்ட குழு உறுப்பினர்  ஆ.சிகாமணி, ஒன்றியக்குழு உறுப் பினர்கள் பி.மகாலிங்கம், கே.வசந்தி,  எஸ். பானுமதி, அ.சந்தோஷ், என். இளங்கோ, என்.கோபால், கிளைச் செய லாளர்கள் எஸ்.அப்புசாமி, ஆர்.என்.ரத் தினசாமி, கே.சுப்பிரமணியம், ஈ.மங்கு லட்சுமி, கே.எஸ்.கற்பகம், விஸ்வநா தன், பி.கதிர்வேல் ஆகியோர் உரையாற் றினர்.