districts

img

“வெள்ளைக்காரன் போட்ட சாலை வெளியில் தெரியுது”

உதகை, நவ.7- கூடலூர் சட்டமன்ற தொகுதிக ளுக்கு உட்பட்ட சாலைகள் மிக மோசமான நிலையில் இருக்கும் நிலையில், இதனை உடனடியாக செப்பனிட வலியுறுத்தி பந்தலூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் புதனன்று உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்ட மன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சாலைகள் மிக மோசமான நிலை யில் உள்ளது. கேரளாவில் இருந்து  தமிழ்நாட்டை இணைக்க கூடிய  வழிக்கடவு நாடு காணி சாலை மிக வும் மோசமடைந்த சூழலிலேயே காணப்படுகின்றது. இதனால், கன ரக வாகனங்கள் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டை இணைக்கக்கூடிய போக்குவரத்து அனைத்துமே ஸ்தம் பித்து போகக்கூடிய சூழல் ஏற்படு கின்றது. கேரளாவில் உள்ள வழிக் கடவு முதல் நாடு காணி வரை இருக்கக்கூடிய 20 கிலோமீட்டர் சாலையில் கேரள அரசு போட் டுள்ள 12 கிலோமீட்டர் சாலை, தர மானதாகவும் மீதமுள்ள 8 கிலோ மீட்டர் இருக்கக்கூடிய தமிழ்நாட் டின் சாலை பயன்படுத்துவதற்கு தகுதியற்றதாகவும் மாறியிருக்கிள் றது. வெள்ளைக்காரன் போட்ட சாலை வெளியே தெரிகிறது. உடன டியாக சாலையை செப்பனிட வேண் டும் என தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கம் உள்ளிட்ட இயக்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகி றது. மீன் பிடிக்கும் போராட்டம்,  வாழை மரம் நடும் போராட்டம், நடை பயணம் என அடுத்தடுத்து இயக் கங்கள் நடைபெற்ற போதும், எவ் வித நடவடிக்கையும் நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ளவில்லை. இத னையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பந்தலூரில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது.  இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ஒப் பந்ததாரரும் நெடுஞ்சாலை துறை யும் ரகசியமாக போட்டுக் கொண்ட  ஒப்பந்தத்தின் அடிப்படையில் சாலைக்கு பயன்படுத்தக்கூடிய அனைத்து தொகையுமே ஊழல் செய்துள்ளனர். பராமரிப்புக்கான தொகைகூட இல்லை என சாலை யில், தற்காலிக பணிகள் கூட நடை பெறாமல் இருக்கிறது. தற்போது உண்ணாவிரதம், முற்றுகை என  அடுத்தடுத்து அறிவிப்பை மார்க் சிஸ்ட் கட்சி வெளியிட்டள்ள நிலை யில், குழியான சாலைகளில் ஜல்லி களை கொண்டு நிரப்பி, அதில் மண்  இட்டு நிரப்புகின்றனர். இதனால் பெரும் விபத்து ஏற்படக்கூடிய அபா யம் உள்ளது. எனவே கண்துடைப் புக்கான பணிகளை செய்யாமல் புதிய தார்ச்சாலையை அமைக்க வேண்டும் என இந்த உண்ணா நிலை போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுத்துள்ளதாக தெரி வித்தனர்.  முன்னதாக, நாடுகாணி கடை வீதியில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி யினர் ஊர்வலமாக வந்து பந்தலூ ரில் உண்ணாவிரத போராட்டத்தை  துவக்கினர். பந்தலூர் ஏரியா கமிட்டி யின் செயலாளர் ரமேஷ் தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர்களில் ஒருவரும், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவருமான என்.வாசு போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.ஏ.குஞ்சு முக மது, மாவட்டக்குழு உறுப்பினர்கள்  ஜி.வர்கீஸ், சி.மணிகண்டன், வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர்  சுதர்சன் மற்றும் ராசி.ரவிக்குமார், பெரியார் மணிகண்டன், மாறன், ராதாகிருஷ்ணன், யோக சசி உள் ளிட்ட தலைவர்கள் உரையாற்றி னர். இப்போராட்டத்தில் ஏராளமா னோர் பங்கேற்றனர்.