districts

img

சிபிஎம் அலுவலகம்: பி.ஆர்.நடராஜன் எம்.பி., திறந்து வைத்தார்

கோவை, ஜன.16- மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை வடக்கு நகரக்குழுவிற்குட்பட்ட, கண் ணப்ப நபர் கிளை அலுவலக புதிய கட்டிடத்தை ஞாயிறன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை வடக்கு நகரக்குழு, கண்ணப்ப நகர் கிளையின் 50 ஆண்டு பொன்விழா மற்றும் சிபிஎம் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா  ஞாயிறன்று கிளைச் செயலாளர் ஆர். அருள்குமார் தலைமையில் நடை பெற்றது. இதில், புதிய கட்டிடத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் திறந்து வைத்தார். அலுவலகத் தின் பொன் விழா ஆண்டு பெயர் பலகை மற்றும் கட்சியின் மக்களுக் கான போராட்டங்களில் முன்னின்று செயலாற்றிய தோழர்களின் பெயர் கள் பதித்த கல்வெட்டினை மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் சி.பத்மநாபன் திறந்து வைத்தார்.  முன்னதாக நடைபெற்ற திறப்பு விழா கூட்டத்தில், கட்சி கிளை அலுவ லக கட்டிடப்பணிகளை வெற்றிகர மாக முடித்த கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள், பொருளுதவி செய்து உதவியவர்களை வாழ்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். ஆர்.முருகேசன், கோவை வடக்கு நக ரச் செயலாளர் ஆர்.சுந்தரம் ஆகி யோர் உரையாற்றினர். இதில், பி.ஆர்.நடராஜன் எம்.பி.,  பேசுகையில், தமிழ்நாட்டில் இருக் கும் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகி யோர் வரலாற்றை மாற்றிட புதிய பெயர் சூட்டுவது,

புதிய வரலாற்றை திணிப்பது போன்ற நடவடிக்கை களை செய்து வருகின்றனர். ஆனால், புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட் டியில் மனித கழிவுகளை விவகா ரத்தை பற்றியோ, பாதிக்கப்பட்ட மக் களுக்காக ஒரு வார்த்தைகூட பாஜக வினர் பேசுவதோ கிடையாது, என் றார். இதைத்தொடர்ந்து சி.பத்மநா பன் பேசுகையில், பல்வேறு சவால் களை சந்தித்து முன்னேறி வருகின்ற மார்க்சிஸ்ட் கட்சி தாழ்த்தப்பட்ட, சிறு பான்மை மக்களின் பிரச்சனைகளில் முன்னின்று செயலாற்றி வருகிறது.  பொருளாதார ரீதியில் அந்த மக்க ளுக்கு உதவுவது என முடிவு செய்து, நம்மால் உதவிட முடிந்தால் இந்தியா வில் மார்க்சிஸ்ட் கட்சியின் அருகில் கூட யாராலும் வரமுடியாது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவ லகங்கள் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க எந்த நேரத்திலும் செயல்படு கின்ற அலுவலகமாக திகழும், என் றார்.  முடிவில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவர் நிஷார் அகமது நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர் வி.ராமமூர்த்தி, பகுதி மக்கள், கட்சியின் ஆதரவா ளர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.