நாமக்கல், நவ.21- மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக் கல் பிரதேசக்குழு செயலாள ராக கு.சிவராஜ் தேர்வு செய்யப் பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் நாமக்கல் பிரதேசக்குழு வின் 8 ஆவது மாநாடு, ஆட்சி யர் அலுவலகம் எதிரே உள்ள கட்சி அலுவலகத்தில் புதனன்று நடைபெற் றது. கு.சிவராஜ், மாலா, செங்கோட்டையன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டு கொடியை பி.கே.கருப்பண்ணன் ஏற்றி வைத் தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி துவக்கவுரையாற்றினார். அறிக்கையை பிர தேசக்குழு செயலாளர் இ.எம்.ராஜேந்திரன் முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என்.வேலுச்சாமி வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், நாமக்கல் - திருச்சி சாலை யில் உள்ள மருத்துவமனையை, நாமக்கல் தாலுகா மருத்துவ மனையாக செயல்பட அரசு ஆணையிட்டு, போதிய மருத்து வர்களை நியமித்து, 24 மணி நேர மும் செயல்படுவதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும். நாமக் கல், நல்லிபாளையம் சாலை அருகில் அமைந்துள்ள, தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள நடைமுறை துணைச் சாலைகளின், இரண்டு பக்கமும், மின்விளக்குகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் நாமக்கல் பிரதேசக்குழு செயலாள ராக கு.சிவராஜ் மற்றும் 9 பிரதேசக்குழு உறுப் பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி நிறை வுரையாற்றினார்.