districts

img

சிபிஎம் மேட்டுப்பாளையம் தாலுகாச் செயலாளராக கே.கனகராஜ் தேர்வு

மேட்டுப்பாளையம்,நவ.17- மார்க்சிஸ்ட் கட்சியின் மேட் டுப்பாளையம் தாலுகாச் செய லாளராக கே.கனகராஜ் தேர்வு  செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலூகா 11  ஆவது மாநாடு. காரமடை அடுத் துள்ள பெட்டதாபுரம் பகுதியில்,  தோழர் வி.சந்திரசேகரன் நினைவரங்க கட்டி டத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு பிரதீப், ஜீவாமணி ஆகி யோர் தலைமை வகித்தனர். முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் சி.பெருமாள் செங் கொடியினை ஏற்றி வைத்தார். எஸ்.வீரபத்தி ரசாமி வரவேற்றார். எஸ்.கே.வேலுசாமி அஞ் சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலக்குழு  உறுப்பினர் ஏ.ராதிகா துவக்கவுரையாற்றி னார். தாலூகாச் செயலாளர் கே.கனகராஜ், தாலூகாக்குழு உறுப்பினர் எம்.மெகபுநிஷா  ஆகியோர் அறிக்கையினை முன்வைத்த னர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். கோபால் வாழ்த்திப் பேசினார்.  இம்மாநாட்டில், எரிபொருட் கள் விலையை குறைக்க வேண்டும். மேட்டுப்பாளையம் -  கோவை ரயில் பாதையை இரு வழிப்பாதையாக மாற்ற வேண் டும். காரமடை பகுதி மக்க ளுக்கு பாதுகாக்கப்பட்ட குடி நீரை, விளாமரத்தூர் நீரேற்று நிலையத்தில் இருந்து வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்திக் கடவு - அவிநாசி திட்டம் நிலை 2யை நிறை வேற்ற வேண்டும். வனவிலங்குகளால் விவ சாயம் பாதிப்படைவதை தடுக்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் மேட்டுப் பாளையம் தாலுகாச் செயலாளராக கே.கன கராஜ் மற்றும் 11 தாலுகாக்குழு உறுப்பினர் கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ் நிறை வுரையாற்றினார். முடிவில், தாலூகாக்குழு உறுப்பினர் பி.பூபதிராஜன் நன்றி கூறினார்.