திருப்பூர், மே 17 - திருப்பூர் 28ஆவது வார்டு கிருஷ்ணா நகர் பகுதியில் ஆறாண்டு காலமாக தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றவும், பாதாளச் சாக்கடை வசதி ஏற்படுத்தித் தரவும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் அப்பகுதி மக்கள் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமாரி டம் கோரிக்கை மனு அளித்தனர். செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கட்சியின் சரளைக்காடு கிளைச் செய லாளர் வீ.பாலசுப்பிரமணியம் தலை மையில் அப்பகுதி மக்கள் மாநக ராட்சி அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ரங்கராஜ், ஜி.சாவித் திரி, மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலி உள்ளிட்டோர் பொது மக்களுடன் சேர்ந்து மேயர் தினேஷ் குமாரிடம் கோரிக்கை குறித்து வலி யுறுத்தினர். கிருஷ்ணாநகர் முதல் வீதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வரு கின்றன. கடந்த ஆறாண்டு காலமாக அப்பகுதியில் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இத னால் கழிவுநீரில் கொசு, புழுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற் பட்டு நோய் பரவும் நிலை உள்ளது. அதுபோல், மழைக் காலங்களில் மழை நீர் வீடுகளில் புகுந்து சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. தனிநபர் ஒருவர் பொது வீதியை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளார். எனவே, அந்த ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும். பாதாளச் சாக் கடை இணைப்புக்கான குழாய்களை மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி பதிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இப் பகுதி மக்கள் மேயர் தினேஷ்குமாரி டம் கேட்டுக் கொண்டனர்.