குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு: திருமுருகன்பூண்டி நகர்மன்றத்தில் சிபிஎம் வலியுறுத்தல்
அவிநாசி, பிப்.28 – குடிநீர் தேவையை போர்க்கால அடிப்ப டையில் நிறைவேற்ற வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற உறுப் பினர் எஸ்.சுப்பிரமணியம் வலியுறுத்தினார். திருமுருகன்பூண்டி நகரமன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் குமார் தலைமையில், நக ராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ் முன்னி லையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 10 ஆவது வார்டு நகரமன்ற உறுப்பினர் சுப்பிர மணியம் பேசுகையில், வார்டு பகுதியில் கொசு மருந்து அடித்து ஆறு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டது. மருந்தடிக்க வேண்டு மென்றால் போதிய மருந்துகள் இல்லை என்று கூறுகிறார்கள், உடனடியாக கொசு மருந்து அடிக்க வேண்டும். தனியார்மயமா கும் தீர்மானம் கொண்டு வந்தபோது, பெரும் பகுதி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து விட்டோம். ஆனால் திமுக உறுப்பினர்கள் மட் டுமே அரங்கத்தில் இருந்த நிலையில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடிநீர் தேவை என்பது போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும், இரண்டாவது குடிநீர் திட்டத்தில் திருமுருகன் பூண்டி இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் தேக்கி வைக்க அடிப்படை கட்ட மைப்பு இல்லை. உடனடியாக அடிப்படை கட் டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். புதிய குடிநீர் இணைப்பு கேட்டு 1300 விண்ணப்பங் கள் பெறப்பட்டுள்ளது. தீர்வு எப்பொழுது என கேள்வி எழுப்பினார்.
முதல்வரை சந்திக்கலாம்
இதனைத் தொடர்ந்து 14ஆவது வார்டு உறுப்பினர் தேவராஜன் பேசுகையில், புகார் பெட்டியில்பெறுகிற மனுக்களை வரிசைப் படுத்தி, முறையாக தீர்வு காண வேண்டும், மன்றக் கூட்டத்தில் நகரமன்ற உறுப்பி னர்கள் பேசியதை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும், கூட்டத்தில் நிறைவேற்றும் தீர்மா னம், தெரிவிக்கின்ற கோரிக்கைகள் நிறை வேற்றப்பட்டதா என அடுத்த கூட்டத்தில் முதல் அஜெண்டாவாக, முடிந்த வேலைகள் எத்தனை? பாக்கியுள்ள வேலைகள் எத் தனை? என்பதை தெரியப்படுத்த வேண்டும். சிவா நகர் பகுதியில் போர்வெலுக்கு மின் இணைப்பு பெற ஆறு மாதம் காத்துக் கிடக்க வேண்டியநிலை உள்ளது. உடனடியாக மின் அலுவலகத்தில் படிவம் கொடுக்கப்பட்டு மின் இணைப்பு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண் டும். நகராட்சி தேவைகளை பூர்த்தி செய்ய, அமைச்சர் மற்றும் முதல்வரை சந்திக்க வேண் டும் என தெரிவித்தார்.
வாக்குவாதம்
இதற்கு நகராட்சி ஆணையர் பதிலளிக் கையில், நகராட்சி உறுப்பினர்கள் பேசு வதை புத்தகத்தில் பதிவு செய்வது வழக்க மாக இல்லை. உறுப்பினர் பேசுவதை நீங்கள் (தலைவர்) தான் என்னிடம் தெரிவிக்க வேண் டும் எனக் கூறினார். அதற்கு நகரமன்ற தலை வர், எந்த வேலை கூறினாலும் தடையாக நீங் கள் உள்ளீர்கள், என ஆணையரைப் பார்த்து கூறினார். தொடர்ந்து இருவரும் வாக்குவா தம் செய்து கொண்டனர். இதற்கு இருவரும் சுமூகமாக சென்றால் மட்டுமே வார்டு வேலை கள் நடைபெறும் என நகரமன்ற உறுப்பி னர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 22ஆவது வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பார்வதி பேசுகை யில் வார்டு பகுதியில் சாலை, சாக்கடை, குழாய் பதிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு டெண்டர் விடாமல் அப்படியே உள்ளது. உடனடியாக நிதி ஒதுக்கியதற்கு வேலை களை துவக்க டெண்டர் விட வேண்டும் பணி களை துவக்க வேண்டும் என கூறினார்.
ஸ்ரீ சரஸ்வதிகிரி பள்ளியின் 32 ஆவது ஆண்டு விளையாட்டு விழா
திருப்பூர், பிப்.28 - திருப்பூர் ஸ்ரீ சரஸ்வதிகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எமரால்டு இன்டர்நேஷனல் பள்ளிகளின் 32ஆம் ஆண்டு விளையாட்டு விழா தாய்மூகாம்பிகை நகரில் உள்ள எமரால்டு பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. பள்ளியின் நிர்வாக அதிகாரி பிரபாவதி தலைமை தாங்கி னார். எமரால்டு இன்டர்நேஷனல் பள்ளி துணை முதல்வர் தெய்வசிங் வரவேற்றார். திருப்பூர் மாநகராட்சி 1 ஆவது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, கவுன்சிலர் தங்கராஜ், திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் பதுருன்னிஷா பேகம் ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினர். இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் லெசிம், மாஸ் டிரில், ஃபன் கேம்ஸ், ஏரோபிக்ஸ், மழலையரின் கண்க வர் நடனம் நடைபெற்றது. முடிவில் பள்ளி முதல்வர் கலைச் செல்வி நன்றி கூறினார்.
ஆளுநர் ரவியை கண்டித்து இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
திருப்பூர், பிப்.28 – மாமேதை கார்ல் மார்க்ஸ் குறித்து அவதூறு பேசிய தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியினர் பல்லடத்தில் செவ்வாயன்று ஆர்ப்பாட் டம் நடத்தினர். அக்கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பி னர் எஸ்.தெய்வசிகாமணி, பல்லடம் இடைக்குழுச் செயலா ளர் சாகுல்அமீது, உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் திருப்பூர் மற்றும் உடுமலைபேட்டையிலும் அக்கட்சியினர் ஆளுநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத் தினர்.
கறிக்கோழி விலை சரிவு: ரூ.300 கோடி நட்டம்
நாமக்கல், பிப்.28- கறிக்கோழி விலை சரிந்துள்ளதால், ரூ.300 கோடி அளவிற்கு நட்டம் ஏற்பட்டுள்ள தாக முட்டை கோழி பண்ணையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 30 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கொள் முதல் விலை என்பது தீபாவளி, கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அதிகரிப்பதும், புரட்டாசி, கார்த் திகை, ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை காலங்க ளில் குறைவதும் வாடிக்கையாக உள்ளது. அதன்படி கடந்த பிப்.1 ஆம் தேதி கொள் முதல் விலை ஒரு கிலோ 92 ரூபாய் என நிர்ண யம் செய்யப்பட்டது. பிப்.5 ஆம் தேதி ரூ.84, பிப்.20 ஆம் தேதி ரூ.89 என ஏற்றம், இறக்க மாக காணப்பட்டது. இந்நிலையில், திங்களன்று கறிக்கோழி விலை 12 ரூபாய் சரிந்து ரூ.77 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரே நாளில் 12 ரூபாய் விலை குறைந்தது பண்ணையா ளர்கள் மத்தியில் கவலை அடைய செய் துள்ளது. இதுகுறித்து முட்டை கோழி பண் ணையாளர்கள் கூறுகையில், பிசிசி நிர்ண யம் செய்யும் முறையிலிருந்து கிலோவுக்கு 30 ரூபாய் குறைத்து, பண்ணைகளில் கோழி களை பிடிக்கின்றனர். இதனால் தினமும் ரூ.11 கோடி வீதம் வாரம் ரூ.27 கோடி இழப்பு ஏற்படு கிறது. ஒரு கிலோ கோழி உற்பத்தி செய்வ தற்கு 90 முதல் 100 ரூபாய் செலவாகிறது. உற் பத்தி செலவுடன் குறைத்து, விற்பனை செய்வ தால் பண்ணையாளர்களுக்கு பெரும் நட்டம் ஏற்படுகிறது. கொள்முதல் விலையில் இருந்து சராசரி யாக 10 ரூபாய் குறைத்தே கோழிகளை வாங் குகின்றனர். இந்த மாதம் மட்டும் ரூ.300 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. கோழி பண்ணை தொழிலை காப்பாற்ற தமிழ்நாடு அரசு, பண் ணையாளர்களை அழைத்து பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற னர்.
சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி
கோவை, பிப்.28- பொள்ளாச்சி வனச்சரகப்பகுதியில் ஆனைமலை புலி கள் காப்பக துணை இயக்குனர் பார்கவ தேஜா தலைமை யில் களப்பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப் போது வெடிக்காரன் பாலி என்னும் இடத்தில் ஒரு நபர் வெள்ளை நிற சாக்குப்பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார் அவர் ரோந்து பணியில் உள்ள களப்பணி யாளர்களை கண்டதும் ஓட முயற்சித்தார். அப்போது அவரை களப்பணியாளர்கள் விரட்டி சென்று பிடித்தனர். இவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், மேல்முண்டியூர் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி என்பதும், தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்த தும் தெரிய வந்தது, மேலும் அவர் வைத்திருந்த பையில் 15 கிலோ எடை கொண்ட ஏழு சந்தன மர கட்டைகள், கைரம்பம், வெட்டுக்கத்தி, கோடரி மற்றும் தீப்பெட்டி உள்ளிட்ட பொருட் கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இவர் கடந்த 20 ஆம் தேதி கேரளாவில் உள்ள மறையூர் பகுதியில் இருந்து சந்தன கட்டைகளை வெட்டி, விற்பனைக் காக பொள்ளாச்சி கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த வனத்துறையினர் அவரிடமிருந்த சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு: நாளை வாக்கு எண்ணிக்கை
ஈரோடு, பிப்.28- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 74.79 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில், வியாழ னன்று (நாளை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்களன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. 52 மையங்களில், 238 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் திரண்டு ஜனநாயக கட மையை ஆற்றினர். மாலை 6 மணி வரை 237 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு முடிந்தது. 138 எண் கொண்ட ராஜாஜி புரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு முடியவில்லை. வாக்களிக்க காத்திருந்த 300க்கும் மேற்பட்டோருக்கு, டோக்கன் வழங்கப்பட்டு இரவு 9.45 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 1472 வாக் காளர்களைக் கொண்ட இந்த வாக்குச் சாவடியில் 601 ஆண்கள், 713 பெண் கள் என 1314 பேர் வாக்களித்தனர். இத னையடுத்து தொகுதியில் மொத்தம் 82 ஆயிரத்து 138 ஆண் வாக்காளர் களும், 88 ஆயிரத்து 37 பெண் வாக்கா ளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 17 பேரும் என 74.79 விகிதம் வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இது கடந்த தேர்தலை விட 8 விகிதம் கூடுதலாகும். பதிவான வாக்கு பதிவு இயந்தி ரங்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சித்தோடு ஆர்டிடி பொறியியல் கல்லூரி யில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண் ணும் மையத்திற்குக் கொண்டு செல்லப் பட்டது. வாக்கு எண்ணிக்கை வியாழ னன்று (நாளை) நடைபெற உள்ளது.
பசுமாடு மீட்பு
உதகை, பிப்.28- கோத்தகிரி, தாந்தநாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகி றார். இவர் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார். அப்போது, பசு மாடு ஒன்று எதிர்பாராத வித மாக அப்பகுதியில் இருந்த மூடப்படாத 20 அடி பள்ளத் தில் விழுந்தது. இதனைய டுத்து அதிர்ச்சி அடைந்த விவ சாயி, தீயணைப்பு துறையின ருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில், அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலு வலர்கள் மாதன், கருப்பசாமி தலைமையிலான குழுவினர் நீண்ட நேரம் போராட்டத் திற்கு பிறகு பசு மாட்டினை பத்திரமாக மீட்டனர்.