districts

img

பட்டாசு ஆலை விபத்தில் மூவர் பலியான விவகாரம் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

சேலம், ஜுன் 2- சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த மூவர் குடும் பத்திற்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க  வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல் லப்பட்டி, செங்கானூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கந்த சாமி. இவர் சர்க்கில் வானம் பட்டாசு குடோன் உரிமையாளர். இந்த குடோ னில் பத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வந்தனர்.  வியாழயன்று பட்டாசு  குடோனில் திடீரென வெடி விபத்து ஏற் பட்டது.  இந்த விபத்தில் இடிபாடுகளுக் குள் சிக்கிய பட்டாசு குடோன் உரிமை யாளர் சதீஷ்குமார் மற்றும் நடேசன் மற்றும் 40 வயது மதிக்கத்தக்க பெண்  ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . மேலும், பட்டாசு வெடி விபத்தில் மஜ்ரா கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த  மோகனா, எம்.கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த வசந்தா, மகேஸ்வரி, மணிமேகலை, பிரபாகரன், பிருந்தா  ஆகிய 6 பேர் 80 சதவிகித தீக்காயங் களுடன் சேலம் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.  முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சி யின் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.வெங்கடபதி, பி.ராம மூர்த்தி, எம்.குணசேகரன் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித் தனர். 

இவ்விபத்து குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளதாவது, இந்த விபத்தில் பலியா னவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சத் துடன் அரசு வேலை, வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சேலம் மாவட்டக்குழு வலியுறுத்து கிறது. மேலும், இது போன்ற எண்ணற்ற பட்டாசு குடோன்கள் அரசு வகுத்துள்ள  பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் செயல்படுகிறது. ஒவ்வொரு முறையும்  விபத்துகள் நடந்த பிறகே பாதுகாப் பில்லாத குடோன்கள் வெளிச்சத்திற்கு வருகிறது. பாதுகாப்பு விதிகளை கண்காணிக்காத அரசு அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். பாது காப்பில்லாத பட்டாசு குடோன்கள் உரி மத்தை ரத்து செய்திட வேண்டும். பாதிக் கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நட்ட ஈடும், அரசு வேலை வாய்ப்பும் தமிழ் நாடு அரசு வழங்கிட வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட் டக்குழு சார்பில் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகாஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.