கோவை, ஏப்.11– பெரும் சுமையை ஏற்படுத் தும் சொத்து வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கராவிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட தலைவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன் என்.ஜெயபாலன் மற்றும் சிபிஎம் கிழக்கு நகரச் செயலாளர் என்.செல்வராஜ் உள்ளிட்ட தலைவர் கள் மாநகராட்சி ஆணையரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள் ளதாவது, தமிழ்நாடு அரசு ஒன் றிய அரசின் வழிகாட்டுதலின்படி உள்ளாட்சி அமைப்புக்களுக் கான சொத்துவரியை உயர்த்துவ தற்கு அரசாணை வெளியிட்டுள் ளது. ஒன்றிய அரசு மாநிலங்க ளுக்கு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்கிறபோது மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் உரிமைகளை பறிக்கிற வகையில் நிபந்தனைகள் எது வும் விதிக்கக்கூடாது.
ஆனால், தற் போதைய ஒன்றிய அரசின் நடவ டிக்கைகளும் அதற்கேற்ப மாநில அரசின் அரசாணையும் முழுமை யாக உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளை பறித்துவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதை வன்மையாக கண்டிக்கி றது. உள்ளாட்சி அமைப்புகள் அநி யாயமான வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். நெடுங் காலமாக உள்ளாட்சி அமைப்பு களில் தீர்மானிக்கப்படும் சொத்து வரியை உள்ளாட்சி அமைப்புகள் தான் தீர்மானிக்கும். சென்னை போன்ற பெருநகரங்களில் இருக் கக்கூடிய வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளினுடைய சொத்து மதிப்பும் தமிழத்தின் இதர பகுதிகளில் இருக்கக்கூடிய மதிப்பும் வியாபாரமும் பெரும ளவு மாறுப்பட்டது.
இன்னும் சொல்லப்போனால் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற குடியிருப்புகள் வணிக பகுதிகளும் ஏராளமாக இருக்கிறது. வளர்ந்த பகுதிக ளுக்கும் வளர்ச்சியடையாத பகுதிகளுக்கும் ஒப்பீடு செய்யவே முடியாது. 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தப்பட் டுள்ள வரி உயர்வு இப்போது மட்டும் அல்ல தற்போது கட்டப் பட்டு வரும் குடியிருப்புகளுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தும். ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கைகளால் பெட்ரோலிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலையேற்றம், கொரோனா தொற்று ஏற்படுத் திய வேலையின்மை ஆகிய வற்றின் காரணமாக மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளார் கள். தமிழகத்தின் நகர்புறங்களின் 50 சதவிகிதத்திற்கு மேற்பட்ட உழைப்பாளி மக்கள் வாடகை வீடு களில் தான் வசித்து வருகிறார் கள். இந்த வரி உயர்வு அவர்களை பெரிதும் பாதிக்கும். எனவே தாங் கள் இந்த வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.