ஈரோடு, செப். 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழுவின் புதுப்பிக்கப் பட்ட அலுவலகம் வருகின்ற 12 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது என மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சண்முகம் வெள்ளியன்று செய்தியா ளர்களிடம் தெரிவித்தார். ஈரோட்டில், மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் 12 ஆம் தேதியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுப்பிக்கப்பட்ட மாவட்டக்குழு அலுவலகம் திறக்கப்படு கிறது. கட்டடத்தை கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினரும், முன் னாள் அகில இந்திய பொதுச் செயலாள ருமான பிரகாஷ் காரத் திறந்து வைக் கிறார். அதில் புதிதாக உருவாக்கப்பட்டி ருக்கிற கூட்ட அரங்கை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் திறந்து வைக்கிறார். அதனையொட்டி மாலையில் கட்சி நிர் வாகிகள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற் கும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் சம்பத் நகர் - நசியனூர் பிரிவு சாலை யில் நடக்க இருக்கிறது என்றார்.
பழங்குடி மக்களை அப்புறப்படுத்த முயற்சி
மேலும் அவர் கூறுகையில், வனத் துறை, இந்திய நாடு முழுவதும் புலிகள் சரணாலயங்களில் இருந்து லட்சக்கணக்கான ஆதிவாசி மக் களையும், வனத்தைச் சார்ந்து வாழக்கூ டிய இதர மக்களையும் வெளியேற்றி மறு குடியமர்த்த வேண்டுமென்று சொல்லி ஒரு கடிதத்தை மாநில அரசாங்கங்க ளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டிலும் 5 புலிகள் சரணாலயம் இருக் கிறது. ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்க லம் புலிகள் சரணாலயம் இருக்கிறது. முதுமலை, ஆனைமலை, களக்காடு, மேகமலை ஆகியவை இருக்கின்றன. இவற்றில் வசிக்கும் பல்லாயிரக்கணக் கான மக்களை வெளியேற்றுவதற்கான உத்தரவு அதில் குறிப்பிடப்பட்டிருக் கிறது. இதுசம்பந்தமாக ஏற்கனவே அவர்கள் ஒரு கணக்கெடுப்பை நடத்தி யிருக்கிறார்கள். நாடு முழுவதும் 5 லட் சம் மக்கள் வெளியேற வேண்டிய கட்டா யம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக காட் டின் உள்பகுதியிலிருந்து வெளியேற்று வதற்கான கணக்கு இது. முதலில் இவர் களை வெளியேற்றி விட்டு மொத்தத்தில் மக்களற்ற காடுகள் என்பதை நோக்கித் தான் மத்திய அரசாங்கம் போய்க் கொண்டிருக்கிறது. காடுகளை கார்ப்ப ரேட்டுகளுக்கும், பெரிய நிறுவனங்க ளுக்கும் ஒப்படைப்பது என்கிற முறை யில் 2023 வன பாதுகாப்பு திருத்த சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருக் கிறது. வன பாதுகாப்பு சட்டம் என்பதே வனத்தைப் பாதுகாக்க வேண்டும் என் பதற்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் திருத்தச்சட்டம் கொண்டு வந்ததன் மூல மாக வனங்களிலிருந்து மக்களை அப் புறப்படுத்துவது, வன வளங்களையும், வனத்திலுள்ள கனிம வளங்களையும் பெரிய நிறுவனங்கள் கொள்ளையடிப்ப தற்காக சட்டப்பூர்வ அனுமதியை வழங் குவதுதான் இந்த சட்டம். அந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதே கடுமை யான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடை பெற்றது. அவற்றையெல்லாம் மீறி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி மத்திய அரசிதழில் அவர்கள் வெளி யிட்டனர். ஆகவே, கார்ப்பரேட்டுகள் வனத்திற்குள் கனிம வளங்களை எடுப் பதை சட்டப்படி தடுக்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. புலிகள் காப்பகத்திலிருந்து மக் களை வெளியேற்றுவது என்பதும். கனிம, வன வளங்களை கார்ப்பரேட்டு கள் எடுக்கலாம் என்று சட்டம் இயற் றப்பட்டதும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப் பட்டது. எங்களைப் பொறுத்தவரை எக் காரணம் கொண்டும் காலம்காலமாக வனத்தில் வாழக்கூடிய மக்களை அங் கிருந்து வெளியேற்றுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கி றது. சட்டப்படியாகவும் அது தவறானது. ஏற்கனவே, என உரிமைச் சட்டம் 2006 நடைமுறையில் இருந்து கொண்டிருக் கிறது. அதில் வழங்கியிருக்கிற எல்லா உரிமைகளும் வன சரணாலயங்களில் இருக்கக் கூடிய மக்களுக்குப் பொருந் தும். பழங்குடியினத்தவர்கள் இல்லாத வர்களாக இருந்தாலும் பொருந்தும். வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 38பி என்பது மக்களுடைய ஒப் புதலைப் பெறாமல் அவர்களைக் காடு களிலிருந்து வெளியேற்ற முடியாது என் கிறது. ஆகவே எந்த விதத்தில் பார்த்தா லும் தேசிய புலிகள் ஆணையத்தின் உத் தரவென்பது சட்ட விரோதமானது, உடன டியாக இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். ஒன்றிய அரசும், மாநில அர சும் இந்த உத்தரவை திரும்பப் பெறு வதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகி றோம். ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்த வரை ஈரோடு மாவட்ட மலையாளிகள் 1980ஆம் ஆண்டிலிருந்து பழங்குடி பட்டி யலில் சேர்க்க வேண்டுமென்று கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து போராடி வருகிறோம். தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பு கள் தொடர்ச்சியாக இந்த கோரிக்கையை வற்புறுத்தி வருகிறோம். ஏற்கனவே மலையாளிகள் பட்டியலில் இருக்கி றார்கள். ஈரோடு என்கிற மூன்று எழுத் தைச் சேர்ப்பதற்கு 40 ஆண்டு கால மாகக் காத்திருக்கிறோம். இந்த ஏரியா கட்டுப்பாடு என்பதை எடுத்து விட்டு தமிழ்நாடு முழுவதும் என்று மாற்றிவிட் டாலும் எந்த பிரச்சனையும் இல்லை. காங்கிரஸ் அரசாக இருந்தாலும், பாஜக அரசாக இருந்தாலும் தேவையற்ற கால தாமதத்தை செய்து கொண்டிருக்கிறார் கள். இதனால் கடந்த இரண்டு தலை முறைகளாக பழங்குடியினர் பட்டிய லில் சேர்க்கப்பட்டிருந்தால் பல்வேறு அரசு வேலை வாய்ப்புகளில், உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்திருக்க முடி யும். ஆகவே இதுசம்பந்தமாக குத்தியா லத்தூர், பர்கூர், தாளவாடியில் அனைத்து கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டு போராட்டத்திற்கு திட்டமிடு வோம் என்றார். இந்த செய்தியாளர் சந் திப்பின்போது, சிபிஎம் ஈரோடு மாவட் டச் செயலாளர் ஆர்.ரகுராமன், செயற் குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, ஜி. பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந் தனர்.