districts

img

சிபிஎம் தருமபுரி மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு

தருமபுரி, செப்.29- மார்க்சிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட மாநாட்டிற்கான வரவேற்புக்குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். காவிரி உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை நிறை வேற்ற வேண்டும். தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணி களை துவங்க வேண்டும். நீண்டகால அனுபவ நிலங்க ளுக்கு நிலப்பட்டா, குடியிருப்போருக்கு மனைபட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட மாவட்டத்தின் வளர்ச்சிக்கான கோரிக் கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட 24 ஆவது மாநாடு பாலக்கோட்டில் டிச.13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த  மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான மாநாட்டு வரவேற்புக் குழு கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. பாலக்கோட் டில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, சிபிஎம் வட்டச் செயலா ளர் டி.எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் ஏ.குமார், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபா லன், மூத்த தலைவர் பி.இளம்பரிதி, மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் சி.நாகராசன், எம்.முத்து, சோ.அருச்சுணன்,  எஸ்.கிரைஸாமேரி, வே.விஸ்வநாதன், ஆர்.சின்னசாமி, வி.ரவி, ஆர்.மல்லிகா, தி.வ.தனுசன் ஆகியோர் கலந்து  கொண்டு பேசினர். இதைத்தொடர்ந்து மாநாட்டு வரவேற்புக் குழு தலைவராக சி.நாகராசன், செயலாளராக டி.எஸ்.ராமச் சந்திரன், பொருளாளராக ஏ.சேகர் உள்ளிட்ட 71 பேர்  கொண்ட குழு அமைக்கப்பட்டது. முடிவில், வட்டக்குழு  உறுப்பினர் பி.காரல் மார்க்ஸ் நன்றி கூறினார்.