districts

img

ஆழ்குழாயை சேதப்படுத்திய சமூக விரோதிகள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சிபிஎம் புகார் மனு

திருப்பூர், நவ. 17 - செல்லப்பம்பாளையத்தில் ஆழ்கு ழாயை உருவியெறிந்து சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், ஆழ்குழாய், நீர்த்தேக்கத்  தொட்டியை சீர மைத்து மக்களுக்கு தண்ணீர் வழங்க  வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.  உடுமலைபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் செல்லப்பம்பாளையம் கிளைச் செய லாளர் பிரபுராம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: உடுமலைபேட்டை ஒன்றியம் செல்லப் பம்பாளையம் ஊராட்சியில் கஞ்சம்பட்டி செல்லும் சாலையில் கருப்பராயன் கோயில் வடபுறம் பாலம் வேலை நடைபெற்று வருகி றது. அப்பாலத்தின் கிழக்கு பக்கம், செல்லப் பம்பாளையம் ஊராட்சியின் மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளைக் கிணறு அமைத்து சின்டெக்ஸ் டேங்க் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்தது. அந்த சின்டெக்ஸ் டேங்கை இரண்டு ஆண்டுக ளுக்கு முன்பு சில சமூக விரோதிகள் உடைத்து அப்புறப்படுத்தி விட்டனர்.  அது குறித்து செல்லப்பம்பாளையம் ஊராட்சியின் அலுவலக புகார் குறிப்பேட் டில் கடந்த 2020 மார்ச் 25 அன்று புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.  கிராமசபைக் கூட்டங்களில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த ஆழ்துளை கிணற்றை சேதப்ப டுத்தி ஆழ்குழாய்களை உருவியெறிந்தும், உடைத்தும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது ஆழ்துளை கிணற்றில் நீர் நிறைந்து வீணாகிக் கொண்டுள்ளது. அதை அந்த ஊராட்சி மக்களுக்கு பயன்படுத்திட வேண் டும். மேலும் ஆழ்துளை கிணற்றை சேதப்ப டுத்தி அரசு சொத்துகளை நாசம் செய்திட்ட சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரபுராம் கேட்டுக் கொண்டுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றி யச்செயலாளர் கி.கனகராஜ், விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் உடுக்கம் பாளையம் எஸ்.பரமசிவம் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.