districts

img

பொதுக்கூட்டத்தில் இடையூறு : பாஜக நிர்வாகி மீது சிபிஎம் புகார்

ஈரோடு,பிப். 26- கீழ்வாணியில் நடைபெற்ற சிபிஎம் பொதுக்கூட்டத்தில் இடை யூறு செய்த பாஜக நிர்வாகி மீது  மாவட்ட காவல்துறையில் மார்க் சிஸ்ட் கட்சியினர் புகார் அளித்த னர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தலைவர் மறைந்த  எம்.என்.காளியண்ணன் அவர்க ளின் 28 ஆம் ஆண்டு நினைவுதின பொதுக்கூட்டம் கடந்த மாதம் 18  ஆம் தேதி கீழ்வாணி சந்தை அரு கில் நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு தாலுகா செயலாளர் ஆர். முருகேசன் தலைமை வகித்தார்.  மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண் முகம் சிறப்புரையாற்றினார். கடந்த  27 ஆண்டுகளாக இதே இடத்தில் அமைதியான முறையில் பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.  இந்தாண்டும் முறைப்படி ஆப்பக் கூடல் காவல்நிலையத்தில் அனு மதி பெற்று காவல்துறையினர் பாது காப்புடன் நடைபெற்றது. இந்நிலை யில், பொதுக்கூட்ட  திடலுக்கு இரு சக்கர வாகனத்தில் பாஜக  தாமரை சின்னம் பதித்து வந்த ஒரு வர், கட்சியின் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ஆர்.கோமதி அமர்ந்தி ருந்த நாற்காலி அருகில் இடிப்பது  போல வேகமாக வந்து நிறுத்தி பிரத மரை விமர்சிக்கிறீர்கள் என்று கேட் டார். மேலும், அந்த நபர் தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து, பிரதமரை விமர்சித்து பேசினால் உங்களை கொன்றுவிடுவேன் என்று கொலைமிரட்டல் விடுத்து,  சட்டம் - ஒழுங்கு சீர்குலைக்கும் நிலையை உருவாக்கினார். மேலும், அங்கு இருந்த காவல்து றையினரிடமும் வாக்குவாதம் செய்தார். மேலும் இடத்தை விட்டு  போகாமல் வெளியூர் ஆட்களுக்கு  போன் செய்து வரவழைத்து கலவ ரத்தை ஏற்படுத்த முயன்றார்.  இதுகுறித்து விசாரித்ததில் மேற்படி நபர் கீழ்வாணி அருகில் உள்ள போகநாயக்கனூரைச் சேர்ந்த சமையல்கார சின்னு (எ)  சின்னச்சாமி என்றும் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஈரோடு மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் அலுவலகத் தில் புகார் அளித்தனர். இதில்,  அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சி யின் பொதுக்கூட்ட நிகழ்வில், சட்ட விரோதமாக அத்துமீறி நுழைந்து, பொது அமைதிக்கு பங்கம் ஏற்ப டும் வகையிலும், சட்டம் - ஒழுங் குக்கு சீர்குழைவை ஏற்படுத்தும் வகையிலும், பொது இடத்தில் ஒரு  கலவரச்சூழலை உருவாக்கி எங் களை தகாத வார்த்தைகளில் பேசி  கொலைமிரட்டல் விடுத்த மேற்படி  சமையல்கார சின்னு (எ) சின்னச் சாமி மீது தகுந்த நடவடிக்கை எடுக் குமாறு மறுநாளே ஆப்பக்கூடல் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தோம்.  ஆனால் புகார் மனு மீது நாளது  தேதிவரை ஆப்பக்கூடல் காவல்நி லைய அதிகாரிகள் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே மேற்படி சின்னு (எ) சின் னச்சாமி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அந்தியூர் தாலுகாச் செயலாளர் ஆர்.முருகேசன் புகார்  மனு அளித்தார். இதில், மாவட்டச்  செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் பி.பி.பழனிச்சாமி, ஆர்.கோமதி, மாவட்ட குழு உறுப்பினர் ஏ.ஜெகநாதன், பவானி தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம் மற் றும் அந்தியூர் தாலுகா கமிட்டி உறுப் பினர் ஏ.கே.பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.