சேலம், பிப். 3 - நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பட்டியலின மக்களின் வீடுகளை இடித்த, ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் சேலம் ஆட்சி யர் அலுவலகத்தில் முறையீடு செய்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா தம்மம்பட்டி பேரூராட்சி தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 1998 முதல் அப்பகுதியில் வசிக்கும் அவர்களின் வீடு களுக்கு பட்டா இருந்துள்ளது. இதில் 20 குடும்பத்தினரின் பட்டாவை ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் ஜெய லட்சுமி அவர்கள் ரத்து செய்ததாகவும் இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். நீதி மன்றத்தில் 30 பேருக்கும் பட்டாவை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது 30 வீடுகளும் இடித்து தள்ளப்பட்டுள்ளது. இத னைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் வந்து முறையீடு செய்தனர். மேலும், இடித்து தள்ளிய வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நீதி மன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட தனி வட்டாட்சி யர் ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆத்தூர் தாலுகாச் செய லாளர் முருகேசன் தலைமையில் திங்களன்று முறையீடு செய் தனர்.