அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசின் தொடர் பொருளாதார தாக்குதல்க ளால் தொழில்களும், தொழிலாளர்களும் திக்கற்று நிற்கின்றனர். வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்றவற்றால் அனைத் துத் தரப்பு மக்களும் விழி பிதுங்கிக்கிடக் கின்றனர். இச்சூழலில் மக்களின் நம்பிக்கை கீற்றாய் செங்கொடி இயக்கம் மட்டுமே களம் காண்கிற இயக்கமாக உள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் மனசாட்சியான மார்க்சிஸ்ட் கட்சி, வர்க்க எதிரிகளிடமிருந்து, தொழி லாளி வர்க்கத்தை பாதுகாக்க, கூர் தீட்டும் முனைப்போடு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநா டுகள் நடைபெற்று வருகிறது. கிளை மாநாடு கள் துவங்கி, இடைக்குழு, மாவட்டக்குழு மாநாடுகள் நடைபெற்று, விழுப்புரத்தில் மாநில மாநாடும், மதுரையில் அகில இந்திய மாநாடும் எழுச்சியோடு நடைபெறவுள்ளது. இதன்தொடர்ச்சியாக கோவையில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாடு டிச.22, 23 ஆம் தேதிகளில் நடை பெற உள்ளது. இம்மாநாட்டு செய்தியை வெகுஜன மக்கள் மத்தியில் கொண்டு செல் லும் முயற்சியாக, பல்வேறு வடிவங்களில் பிரச்சார இயக்கங்கள் நடைபெற்று வருகி றது. கடந்த டிச,14 ஆம்தேதி மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், கவிதை, கட்டுரை, ஓவியம், பேச் சுப்போட்டி, ரீல்ஸ் போட்டி நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற் சாகமாக பங்கேற்றனர். வெறுமனே போட்டி, பரிசு என இல்லாமல், மாணவர்களின் சமூக அறிவை மேம்படுத்தும் வகையில், கல்வி, சுகாதாரம், சூழலியல், பாலினம், வகுப்பு வாத அபாயம் குறித்து நடைபெற்ற இப் போட்டிகளில் மாணவர்கள் தங்களின் தனித் திறனை வெளிப்படுத்தினர். இதேபோன்று, பாலின சமத்துவ நடை பயணம், வரலாற்று புகைப்பட கண்காட்சி, பிரச்சார இயக்கம் என அடுத்தடுத்து திட்ட மிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாநாட் டில் தொழிலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கிற மாநாடு வரதராஜபுரம் சாய் விவாஹா மஹாலில் துவங்க உள்ளது. தியாகிகள் ஜோதி மாவட்ட மாநாட்டினையொட்டி டிச,22 காலை சின்னியம்பாளையம் தியாகிகள் ஜோதி, ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் ஜோதி மற்றும் வடவள்ளியில் இருந்து செங்கொடி யும், கொண்டு வரப்பட்டு எழுச்சியோடு மாநாடு துவங்க உள்ளது. ஞாயிறன்று மாலை மசக்காளிபாளையம் மைதானத்தில் நடைபெறும் செம்படை பேரணி, பொதுக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் என்.குண சேகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், மாவட்டச்செயலாளர் சி.பத்மநாபன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா உள்ளிட்ட தலைவர்கள் உரை யாற்ற உள்ளனர். டிச.23 ஆம்தேதி இரண் டாவது நாள் மாநாட்டில், கோவை மாவட்ட உழைப்பாளி மக்களின் உரிமைக்கான பல் வேறு தீர்மானங்களும், மாவட்டத்தின் மக் கள் கோரிக்கைகளை முன் வைத்து தீர் மானங்களும், எதிர்கால இயக்கங்களும் திட்டமிடப்பட உள்ளது. தலைவர் பேசி முடித்ததும் கூடிக்கலை வதே மாநாடு என்கிற நிலையில், இதற்கு மாறாக மூன்றாண்டு கால செயல்பாட்டை ஜனநாயக பூர்வமாக விவாதித்து, பலம், பலவீனம் ஆகியவற்றை உள்வாங்கிக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு செங்கொடி இயக்கத்தின் வளர்ச்சியை, தொழிலாளி வர்க் கத்தின் முன்னேற்றத்திற்காக அடித்தளம் அமைக்கும் மாநாடே மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாடு! (ந.நி)