districts

img

சித்தாந்த போரில் பாஜகவை வீழ்த்தி நாம் வெல்வோம்!

சேலம், டிச.23- வகுப்புவாத நடவடிக்கை களை தீவிரப்படுத்தி, உழைக்கும் மக்களை பிரித்தாலும் பாஜகா வின் சித்தாந்தத்திற்கு எதிரான போரில் இடதுசாரிகள் முன் படை வரிசையில் நின்று பாஜகவை வீழ்த்தி வெற்றி பெறுவோம் என  சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் நம்பிக்கை தெரிவித்தார். சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னனி தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் என்.சங்கரய்யா படத்தி றப்பு நிகழ்வு சேலத்தில் மார்க்சிஸ்ட்  கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை. சண்முகராஜா தலைமை யில் நடைபெற்றது. கே.எஸ்.பழனி சாமி வரவேற்றார். இந்நிகழ்வில், கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் பி.சம்பத் பங்கேற்று, என்.சங்க ரய்யா படத்தை திறந்து வைத்து  உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 102 வயது வரை பாட் டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக பாடுபட்ட மறைந்த தோழர் என்.சங் கரய்யாவின் படத்தையும், நினைவு கல்வெட்டையும் திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெரு மகிழ்ச் சியடைகிறேன். மக்கள் மத்தியில் எளிதாக செல்ல காரணமாக இருந் தது கம்யூனிஸ்ட் தியாகம்தான். தென் மாவட்டங்களில் நடைபெற்ற சாதி மோதல்கள் தனக்கே உரிய பாணியில் கையாண்டவர், பல்வேறு சதி வழக்குகளில் இருந்து சாமர்த் தியமாக பிரச்சனைகளை கையா ளுவதில் வல்லவராக திகழ்ந்தார்.

ஆங்கிலேய முதலாளிகளை மட்டு மல்லாமல் உள்நாட்டு முதலாளிக ளையும் தொழிலாளர்கள் நலனுக் காக எதிர்த்தவர் தோழர் என்.எஸ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை  உருவாக்கிய 32 பேரில் ஒருவராக  இருந்தவர் தோழர் என் எஸ். உழைப் பாளி மக்களுக்கு ஆதரவாக களம் கண்ட தோழர்கள் 1957 கேரளாவில் தான் முதல் முறையாக தேர்தல் மூலம் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைத் தனர். அதன் பின்னர் மேற்கு வங்கா ளம், திரிபுரா போன்ற மாநிலங்கள் வெற்றி நோக்கி சென்றது. 2014 தொடங்கி பாஜக ஆட்சி  செய்து இந்தியாவை கெடுத்து வரு கிறார்கள். ஜம்மு காஷ்மீர், ராமர் கோயில், சிஏஏ சட்டம் கொண்டு  வந்து ஆர்எஸ்எஸ் சவாக்கர் வழி யில் முஸ்லிம்களை வேட்டையாடி வருகிறார்கள். ஜனநாயகத்தை, கருத்து சுதந்திரத்தை ஒடுக்கி வரு கிறார்கள். நியூஸ் கிளிக் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களை உண்மை யான செய்திகள் வெளிவரும் போது அவர்களை அதிகாரத்தை கொண்டு அடக்குகிறார்கள். இன்று நாடாளு மன்றத்தில் 146 நாடாளுமன்ற உறுப் பினர்கள் இடைநீக்கம் செய்து நாடா ளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைத் துள்ளனர். பாசிசத்தை புகுத்தி வரும் பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சித் தாந்த ரீதியில் பாஜகவை வெல் வோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியை பலப்படுத்துவோம், என்றார்.  முன்னதாக இந்நிகழ்வில், மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப் பினர்கள் ஜான்சி ராணி, நம்புரா ஜன், சேலம் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு, இடைக்குழு உறுப்பினர்கள் உள் ளிட்ட எண்ணற்றோர் பங்கேற்றனர். முடிவில், தாலுகாக்குழு உறுப் பினர் சுந்தரம் நன்றி கூறினார்.