districts

img

தாராபுரம் நகராட்சி 28 ஆவது வார்டில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் சிபிஎம் வேட்பாளர்

தாராபுரம், பிப்.17- தாராபுரம் நகராட்சி 28 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட் பாளர் எல்.சுகன்யா இறுதிகட்ட வாக்கு சேக ரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தாராபுரம் நகராட்சி 28 ஆவது வார்டில்  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக எல்.சுகன்யா போட்டியிடுகிறார். பிரச்சாரத்தின் இறுதி நாளான வியாழனன்று பறை இசை யுடன் 28 ஆவது வார்டுக்குட்பட்ட நாராய ணன் பிள்ளை சந்து, சக்தி நகர், பெரியகாளி யம்மன் கோவில் பகுதியில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். இதில்  சிபிஎம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ், திமுக கிளை செயலாளர் சசிக்குமார் உள் ளிட்ட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.