districts

img

அனைத்து வீடுகளுக்கும் ஒகேனக்கல் குடிநீர் தருமபுரியில் சிபிஎம் வேட்பாளர் உறுதி

தருமபுரி, பிப்.17- ஒகேனக்கல் குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் கிடைக்க பாடுபடுவேன் என தருமபுரி நகராட்சி 16 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.கிரைஸா மேரி தெரிவித்தார். தருமபுரி நகராட்சி 16 ஆவது வார்டில் திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக எஸ்.கிரை ஸாமேரி போட்டியிடுகிறார். இவர் வியாழனன்று இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகை யில், ஒகேனக்கல் குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தெற்கு ரயில்வே தெருவில் அதிகளவில் வசித்து வரும் முறைசாரா தொழிலாளர் களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, அரசு வீடு ஆகிய வசதிகள் செய்து தர நகர்மன்றத்தில் தொடர் குரல் எழுப்பு வேன் என உறுதியளித்தார். முன்னதாக, இந்த பிரச்சாரத்தில் தருமபுரி நாடாளு மன்ற உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார், திமுக மாவட்ட  செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி, கிளை செயலாளர் பழனி, மார்க்சிஸ்ட் கட்சியின்‌ மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் ஏ.குமார், ஆர்.மல்லிகா, ஆர்.ஜோதிபாசு, என்.கந்தசாமி மற்றும் மகிளா காங்கி ரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.