districts

img

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சிபிஎம் பிரச்சாரம்

அவிநாசி,ஆக.9 அவிநாசி அருகே வேலாயுதம்பா ளையம் ஊராட்சி மக்களின் அடிப்படை  பிரச்சனைகளை நிறைவேற்றி தரக் கோரி வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேலாயுதம்பாளை யம் ஊராட்சி கிளைகள் சார்பில் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது. வேலாயுதம்பாளையம், ஆட்டை யாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பழுதடைந்த தெருவிளக்குகளை சரி செய்தும், தேவையான இடங்களில் புதிய தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். குடிநீர் இணைப்பு வழங்கு வதுடன், இணைப்பு கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். நீர்வழித் தடங்கள், குட்டைகளை தூர்வாரி புதுப் பிக்க வேண்டும். புதிய குடியிருப்பு களுக்கு டிடிசிபி அப்ரூவல் வழங்கு வதற்கான சிறப்பு முகாம் நடத்த வேண் டும். சாக்கடை வசதி செய்து தருவ தோடு பழைய சாக்கடையை சுத்தம் செய்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பேருந்து நிறுத் தத்தில் நிழற்குடை அமைத்து, அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வேலாயுதம்பாளையம் ஊராட்சி கிளை கள் சார்பில் ஆட்டையாம்பாளையம், வேலாயுதம்பாளையம், பூலக்காட்டுபா ளையம், கருணைபாளையம், சின்ன கருணைபாளையம், ராயன்கோவில் காலனி, பாரதிநகர் உள்ளிட்ட இடங்க ளில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது.  இந்த தெருமுனை இயக்கத்திற்கு சிபிஎம் ஊராட்சி மன்ற முன்னாள் தலை வர் சாமியப்பன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் பழனிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சண்மு கம், ராஜன், பழனிச்சாமி, விவசாய சங்க  ஒன்றியத் தலைவர் முத்துரத்தினம், மாதர்  சங்க ஒன்றியச் செயலாளர் செல்வி, கிளைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.