districts

img

விலை உயர்வு, வேலையின்மைக்கு எதிராக உடுமலை ஒன்றியத்தில் சிபிஎம் பிரச்சாரம்

திருப்பூர், செப். 2 - ஒன்றிய அரசின் தவறான கொள் கைகளால் விலைவாசி உயர்வு மற் றும் வேலைவாய்ப்பு இன்மை அதிக ரித்து வருவதை கண்டித்து உடுமலை  ஒன்றிய கிராமங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கம்  நடைபெற்றது. விலைவாசி உயர்வு, வேலையின் மைக்கு எதிராகவும், கிராமப்புற 100  நாள் வேலைத் திட்டத் தொழிலாளர் களுக்கு தொடர்ச்சியாக  வேலை தரக்  கோரியும், மக்கள் விரோத மோடி அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் செப்டம்பர் 7இல் ஒன்றிய அலுவலகங்கள் முன்பு  மறியல் போராட்டம் நடத்தப்படுகி றது. இதன் ஒரு பகுதியாக  மார்க் சிஸ்ட் கட்சியின் அறைகூவல்படி செப்டம்பர் 7ஆம் தேதி உடுமலை ஒன் றியம் பள்ளபாளையத்தில் கனரா வங்கி முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.   இந்த போராட்டத்தின் நோக் கத்தை விளக்கி  உடுமலை ஒன்றியத் தில் செப்டம்பர் 1ஆம் தேதி வெள்ளி யன்று பிரச்சார இயக்கம் நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை  ஒன்றிய செயலாளர் கி.கனகராஜ் தலைமையில் வெள்ளியன்று காலை  8 மணிக்கு மருள்பட்டியில் பரப்புரை  தொடங்கியது. மருள்பட்டி பழனிச் சாமி வரவேற்றார். கமிட்டி உறுப்பி னரும் விவசாயிகள் சங்க தலைவ ருமான ஏ.பாலதண்டபாணி துவங்கி வைத்து பேசினார். தொடர்ந்து மலை யாண்டி கவுண்டனூர், கண்ணமநா யக்கனூர், மலையாண்டிபட்டினம், குரல்குட்டை, மடத்தூர், ஆலாம்பா ளையம், குருவப்பநாயக்கனூர், குறிச்சிக்கோட்டை, மான்பட்டி ஆகிய பகுதிகளில் மோடி அரசை கண்டித்து மறியல் விளக்கப்ப ரப்புரை நடைபெற்றது.  இதில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் வி.விஸ்வநாதன், மார்க் சிஸ்ட் கட்சி கமிட்டி உறுப்பினர்கள் ஏ. ராஜகோபால், எஸ்.ஜெகதீசன், கே. முருகவேல், எம்.டி.அருண்பிரகாஷ், ஆர்.குமரகுரு, சு.தமிழ்த்தென்றல், வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த த. லோகேஸ்வரன், சி.மாசானி ஆகி யோர் பேசினர். இந்தப் பரப்புரை யில் கட்சிக் கிளைச் செயலாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனத்தில் பங்கேற்றனர். மான்பட்டியில்  பரப்புரை நிறைவாக  பொன்னாலம்மன் சோலை ஆனந் தன் நன்றி கூறினார்.