திருப்பூர், ஜூலை 29- அரிசி எண்ணெய் உள்ளிட்ட அத்தியா வசிய உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்த ஒன்றிய மோடி அரசை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோபாவசே ஆர்ப்பாட்டம் நடத்தியது. அத்தியாவசிய உணவுப் பொருள்களான அரிசி, கோதுமை, எண்ணெய், வெல்லம், மோர் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதித்த மோடி அரசை கண்டித்து மாநிலந்தழுவிய கண்டன இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி திருப் பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை இந்த கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.ராஜகோபால், வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் கே.சி.கோபிகுமார் ஆகியோர் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டு மோடி அரசுக்கு எதிராக கண்டனம் முழங்கினர்.
பல்லடம்
பல்லடம் கொசவபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பல்லடம் ஒன்றிய குழு உறுப்பி னர் கே.வி.சுப்பிரமணியம் தலைமை வகித் தார். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரவீன், மார்க்சிஸ்ட் கட்சியின் பல்ல டம் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசிவம் ஆகி யோர் உரையாற்றினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் மயிலாத்தாள், முருகசாமி, ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற னர்.
ஊத்துக்குளி
ஊத்துக்குளியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் வி.கே.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கு.சரஸ்வதி, ஊத்துக்குளி வட்டக்குழு குழு செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, வட்டக்குழு உறுப்பி னர்கள் ஆர்.மணியன், க.பிரகாஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
பொங்கலூர்
மத்திய மோடி அரசின் அரிசி உள்ளிட்ட அத்யாவசிய பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து பொங்கலூர் பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொங்கலூர் கிளைச் செயலாளர் பி.விஸ்வநாதன் தலைமை ஏற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், ஒன்றிய செயலாளர் ஆர்.பாலன், மாவட் டகுழு உறுப்பினர் ஜி.சம்பத் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினார்கள். திர ளானோர் கலந்து கொண்டனர்.
உடுமலை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடு மலை நகரக்குழு சார்பில் வெள்ளிக்கிழமை உடுமலை தலைமை தபால் அலுவலகம் முன் பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு நகரக்குழு உறுப்பினர் விஸ்வ நாதன் தலைமை தாங்கினார், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.ஆர். மதுசூதனன், நக ரச் செயலாளர் தண்டபாணி மற்றம் நகரக்குழு உறுப்பினர்கள் தோழன்ராஜா, வசந்தி, சித்ரா, ஆட்டோ ஜஹாங்கீர் உள்பட திராளனோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழங்கம் எழுப்பினார்கள்.
தாராபுரம்
தாராபுரத்தில் அண்ணாசிலை முன்பு கட் சியின் தாலூக்கா குழு உறுப்பினர் சத்தீஸ்வ ரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். உணவு பொருட்களுக்கு உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என முழக்கங் கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் ஆர்.வெங்கட்ராமன், பி. பொன்னுச்சாமி, கி.மேகவர்ணன், என். முத்துச்சாமி, கே.கோவிந்தராஜ், செங்குட் டுவன், ஆ.மணியன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
காங்கயம்
காங்கயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரக் கிளைச் செயலாளர் ஜெ.ராமநாதன் தலைமை வகித்தார். இதில் கட்சியின் ஒன்றி யக்குழு உறுப்பினர் எஸ்.தங்கவேல், மாவட் டக்குழு உறுப்பினர் கே.திருவேங்கடசாமி, போக்குவரத்து ஓய்வு பெற்றோர் அமைப்பைச் சேர்ந்த நாச்சிமுத்து, பிஎஸ் என்எல் ஓய்வு பெற்றோர் அமைப்பைச் சேர்ந்த செல்லமுத்து உள்ளிட்டோர் பேசினர். திரளானோர் கலந்து கொண்டனர்.
குடிமங்கலம்
குடிமங்கலம் ஒன்றியம் மூங்கில்தொ ழுவு பிரிவில் வெள்ளியன்று மாலை நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மோகனசுந்தரம் தலைமை வகித்தார். இதில் ஒன்றியச் செய லாளர் என்.சசிகலா உள்பட ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கட்சி அணியினர் பங் கேற்று மோடி அரசின் உணவுப் பொருட்கள் மீதான அநியாய வரி உயர்வுக்கு எதிராக கண்டனம் முழங்கினர்.