districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வரி செலுத்த தாமதமானால் அபராதமா?

சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு

கோவை, செப்.29- வரி இனங்களை தாமதமாக செலுத்தினால் அபராதம் விதிக்கும் கோவை மாநகராட்சியின் செயலுக்கு சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், அதனை ரத்து செய்யும் தீர்மானத்தை முன் மொழிந்தனர்.  கோவை மாநகராட்சியில் அக்டோபர் 1ஆம் தேதிக்கு  பின் தாமதமாக வரி செலுத்துபவர்களுக்கு 1 சதவிகிதம் அப ராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இந்நிலையில், வெள்ளியன்று கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாமன்றக்குழு தலைவர் வி.ராமமூர்த்தி பேசுகையில், தாம தமாக வரி செலுத்துபவர்களுக்கு 1 சதவிகித அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். கலைஞர் நூற்றாண்டையொட்டி, கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க வேண்டும். கோவை மாநகராட்சியில் உள்ள விளையாட்டு மைதா னங்களில் நடக்கும் விளையாட்டு போட்டிகளுக்கு உள் வாடகை வாங்குவது சரியான அணுகுமுறையில்லை. அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் இலவசமாக    நடத்தப்பட வேண்டும்.  குப்பைகளை சேகரிக்க தனியாரை அனுமதிதத்தின் விளைவு, தற்போது ஆங்காங்கே குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்துள்ளது. எனவே, தனியார் ஒப்பந் தத்தை ரத்து செய்து மாநகராட்சியே குப்பைகள் அள்ள வேண்டும். மேலும், மாநகராட்சியில் உள்ள சாலைகள் ஒரு பகுதி வேலை முடித்தும் மறுபகுதி முடிக்க படாமல் இருப்பதால் பொது மக்களுக்கு கடும் சிரமங்கள் ஏற்படு கிறது. தெரு விளக்குகள் பராமரிக்க 2022 ஆம் ஆண்டு  டெண்டர் விட்டதோடு சரி தற்போது இந்த ஆண்டுக்கான டெண்டர் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார். இதேபோன்று மார்க்சிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாமன்ற  உறுப்பினர் பூபதி பேசுகையில், மக்களின் நீண்ட கால கோரிக்கையான தண்ணீர் பந்தல் - விளாங்குறிஞ்சி சாலை யில் உள்ள எஸ் பென்டு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண  வேண்டும். அங்கு உள்ள கட்டிடத்திற்கு மாற்று இட ஒதுக்கீடு  செய்ய வேண்டும். எஸ் பென்டு பகுதியில் ரவுண்டான  அமைக்க வேண்டும். மாநகராட்சி பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர் நியமிக்கும் போது ஒப்பந்தம் எடுத்த நபர்களே அப்பணிகளை செய்ய வேண்டும். வேறு நபர்கள்  அப்பணிகளை செய்வதை ஏற்க முடியாது. இதனால், மக்கள்  நலத்திட்ட பணிகள் மந்தமாக நடைபெறுவதால், மக்கள் அவதிக்குள்ளாவதாக தெரிவித்தார். முன்னதாக, ஒரு சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளதை ரத்து  செய்யக்கோரி அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் உள் ளிட்ட 3 பேர் பதாகைகளுடன் மாமன்ற கூட்டத்திற்குள் முழக்க மிட்டனர். இதையடுத்து, மூவரும் விக்டோரியா ஹாலுக்கு வெளியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, 47ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் பிர பாகரனை இடைநீக்கம் செய்து அடுத்த இரு  கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து மேயர் கல்பனா உத்தரவிட்டார்.

கர்ப்பிணிகளுக்கு  வளைகாப்பு

அவிநாசி, செப்.29- கர்ப்பிணிகளுக்கு  வளை காப்பு நிகழ்ச்சி அவிநாசியில் வெள்ளியன்று நடை பெற்றது. ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத்  தலைவர்கள் சுதா வேல் முருகன் (செம்பியநல்லூர்), மரகதமணி மணியன் (தெக்கலூர்) ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் பங்கேற்ற 105க் கும் மேற்பட்ட கர்ப்பிணி களுக்கு சீமந்த சீர் நடை பெற்று, தாம்பூலத்துடன்,  பூ , வளையல், பழ வகைகள்  ஆகியவை வழங்கப் பட்டது.  தேசிய சிறார் நல திட்ட  மருத்துவ அலுவலர் ஜெய லட்சுமி தலைமையிலான மருத்துவக் குழுவினர் கர்ப்பிணிகளுக்கு மருத் துவப் பரிசோதனை மேற் கொண்டனர்.

வழிப்பறி

கோவை, செப்.29- கூலி தொழிலாளியிடம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார்  வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.  மதுரை, அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் லட்சு மணன். இவரது மகன் ரமேஷ்  (33). இவர் கோவையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று ரமேஷ், தனது நண்பரை பார்க்க விளாங்குறிச்சி சாலையில் நடந்து சென்று  கொண்டிருந்தார். அப்போது  அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், ரமேசை வழிமறித்து கத்தியை காட்டி  மிரட்டி செல்போன், ரூ.500-ம்  பறித்து கொண்டு சென் றனர். இதுகுறித்து, சரவணம் பட்டி போலீசார் வழக்குப்  பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை - 20 ஆண்டுகள் சிறை

உதகை, செப்.29- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  தாய்மாமன், உடந்தையாக இருந்த தாய்க்கு  மகிளா நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.  நீலகிரி மாவட்டத்தில், கருத்து வேறு பாடு காரணமாக கணவரை பிரிந்து, சகோத ரருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இவரின்  6 வயது சிறுமிக்கு, தாய்மாமன் சரவணன்  ரூகேஷ்பாபு பாலியல் ரீதியாக துன்புறுத்தி யுள்ளார்.  இதை தனது தாயிடம் கூறியும், தாய் கண்டுகொள்ளவில்லை. பள்ளிக்கு சென்ற  சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு சோர் வுடன் காணப்பட்டார்.   இது குறித்து பள்ளி நிர்வாகம், குழந்தை கள் நல பாதுகாப்பு அலுவலருக்கு தகவல்  கொடுத்தனர். பின், உதகை அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற் கொண்டு, கடந்த 2018ஆம் ஆண்டு டிச.  5ஆம் தேதியன்று தாய்மாமன், தாய் இரு வரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், இருவரும் பிணையில் வெளியே வந்தனர்.   இந்த வழக்கு உதகை மகிளா  நீதிமன் றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு கூறப்பட்டது.  இதில்,  குற்றவாளிகளான சர வணன் ரூகேஷ்பாபு,  உடந்தையாக இருந்த  தாய் ஆகியோருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை,  ரூ.30 ஆயிரம்  அபராதம் விதித்து  நீதிபதி ஸ்ரீதரன் தீர்ப்பு அளித்தார்.  தொடர்ந்து,  இருவரையும் போலீசார் கோவை மத்திய  சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில்,  அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர்  மாலினி பிரபாகரன் ஆஜராகி வாதாடினார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி, தற் போது காப்பகத்தில் தங்கி உள்ளார். சிறுமி யின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு  ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்க  வேண்டும் என நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட் டார்.

9 மாதங்களில் 153 போக்சோ வழக்குகள் – 120 பேர் கைது

கோவை, செப்.29- கோவை மாவட்டத்தில் கடந்த 9 மாதங் களில் 153 போக்சோ வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு, 120 பேர் கைது செய்யப்பட் டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர் களிடம் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருடப்பட்ட ரூ.40 லட்சம் மதிப் பிலான 200  செல்போன்களை உரியவர் களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு வெள்ளி யன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் பத்தி நாராயணன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் கடந்த  ஜனவரி மாதம் முதல் இதுவரை 34 கொலை  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 60 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். 349 போதைப் பொருட்கள் பதுக்கி வைத்ததாக, வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.70 லட்சம் மதிப்பிலான 660 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. ரூ.33 லட்சம் மதிப்பிலான போதை சாக்லெட்களும் பறிமுதல் செய் யப்பட்டுள்ளது.  இதேபோன்று, 569 திருட்டு வழக்குகளில் 415 பேர் கைது செய்யப்பட்டனர். அவர் களிடம் இருந்து ரூ.4 கோடியே 78 லட்சம்  மதிப்பிலான நகை மற்றும் பணம் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இது வரை 153 போக்சோ வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு, 120 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். இதில், 134 வழக்குகளுக்கு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை  ஆண்டுகளில் காணாமல் மற்றும் திருடப் பட்ட ரூ. 2.50  கோடி மதிப்பிலான செல்போன் கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த செல்போன் களை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில், நடப்பாண்டில் 7519 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8,543  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரி வித்தார். 

பயனில்லாத சாலையை அமைத்த சேலம் மாவட்ட நிர்வாகம்: சிஐடியு போராட்ட அறிவிப்பு

சேலம், செப்.29- மக்களுக்கு பயனில்லாத சாலையை அமைத்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அக்டோபர் மாதத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன், சேலம் ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட் டத்தில் ஈடுபட உள்ளதாக சிஐடியுவினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சிஐடியு சேலம் மாவட்டத் தலைவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏற்காடு, கொட்டச்சேடு பகுதியிலிருந்து அரங்கம் வரை இதுவரை 18 கிராமத்திற்கு மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்த பீல்ட் எண்:6ல் சாலை அமைக்காமல், தனியார் எஸ்டேட் முதலாளிகளுக்கு ஆதர வாக பீல்ட் எண்:7ல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதி மன்ற தீர்ப்பையும் மீறி மாவட்ட நிர்வாகம் நடந்துள்ளது. பொது  மக்களின் நியாயமான கோரிக்கைக்காக அக்டோபர் மாதம் இறுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாதிக்கப்பட் டுள்ள மக்களுடன் சிஐடியு முற்றுகையிடும், என்றனர்.  இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது சிஐடியு மாவட் டச் செயலாளர் ஏ.கோவிந்தன், மாவட்டத் தலைவர் டி.உதய குமார், துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன் மற்றும் பாதிக்கப்பட்ட கிராம மக்களின் ஊர் தலைவர்கள் உடனிருந்த னர்.

திமுக கவுன்சிலர் தற்கொலை முயற்சி

சேலம், செப்.29- மேட்டூர் நகராட்சி கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சி கூட்டம் தலைவர் சந்திரா தலைமையில், ஆணையர் நித்தியா, பொறியாளர் ஹரிஹரன், துணைத்தலைவர் காசி விஸ்வநாதன் ஆகியோர்  முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திமுக கவுன் சிலர் ரங்கசாமி பேசுகையில், 30 வார்டுகளிலும் பல்வேறு பிரச் சனைகள் உள்ளன. இதனை அதிகாரிகள் நேரில் சென்று  கண்டறிந்து பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய  வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து பேசிய நகராட்சி  கவுன்சிலர்கள், வார்டுகளில் தெரு விளக்கு எரிவதில்லை.  சாலை வசதி சரியாக இல்லை. குடிநீர் விநியோகம் சிறப்பாக இல்லை. பாதாள சாக்கடை சீர்குலைந்துள்ளது என பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நகராட்சி தலை வருக்கு புதிய வாகனம் வாங்குவது குறித்த தீர்மானம் வாசிக் கப்பட்ட போது, திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் இளங்கோ  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், 1 ஆவது வார்டு கவுன்சிலர் உமா, நகராட்சி விஷயங்க ளில் தலைவரின் மகன் தலையீடு இருப்பதாக கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனிடையே நகராட்சி கூட்டத்திலிருந்து வெளியேறிய திமுக கவுன்சிலர் இளங்கோ, வெளியே பாட்டிலில் வைத்தி ருந்த பெட்ரோலை நகர்மன்ற கூட்ட நுழைவு வாயிலுக்கு எடுத்து வந்தார். பின்னர் பெட்ரோலை தலை மற்றும் உடல் மீது  ஊற்றிக் கொண்டு நகராட்சி தலைவருக்கு எதிராக கோஷ மிட்டப்படி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த நக ராட்சி பணியாளர்கள், பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மற்றும் கவுன்சிலர்கள் உடனடியாக அங்கு வந்து பெட்ரோல்  பாட்டிலை பறித்து வீசினர். மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றி இருக்கையில் அமர வைத்தனர். இதன்பின் கவுன்சிலர் இளங்கோவை நகராட்சி வாகனம் மூலம் மேட்டூர் அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் மேட்டூர் நக ராட்சி கூட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க விவசாயிகள் எதிர்ப்பு

கோபிசெட்டிபாளையம், செப்.29- பவானி ஆற்றங்கரையோர பகுதிகளில் மாசு ஏற்படுத்தும்  தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என விவசா யிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையின் பாசன பகுதிகளான தடப் பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை வாய்க்கால் இரண்டாம் போக நஞ்சை பாசனத்திற்கான நீரை பெறுவது குறித்த பாசனசபை நிர்வாகிகள் கூட்டம், தலைவர் தளபதி தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள், பாசன சபை நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பாசன சபை நிர்வாகிகள் கூட்டத்தில் சேதமடைந் துள்ள பாசன வாய்கால்களின் இருகரைகளையும் பலப் படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் மற்றும் பாசனத்திற்காக திறந்துவிடப்படும் பவானி ஆற்றில் விதிமுறைகளை மீறி பதித்துள்ள குழாய்கள் அகற்றப்பட்டு, மோட்டார்களின் மின்இணைப்புகளை துண்டிக்க வேண் டும். மேலும், பவானி ஆற்றின் இருகரையோர பகுதிகளி லும், கொடிவேரி அணைகட்டு பாசன பகுதிகளிலும் மாசு  ஏற்படுத்துகின்ற தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வீட்டுமனை கேட்டு காத்திருப்புப் போராட்டம்

ஈரோடு, செப்.29- அந்தியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகு திகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி காத்திருக்கும் போராட்டம் அறி வித்துள்ளது. சத்தியமங்கலம் வட்டம், சக்தி நகரம், தோப்பூர் பகுதியில் வாழும் பட்டா இல்லா பட்டியலின மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். மலையடிப்பதூர் கிரா மம், அங்கண்ணகவுண்டன்புதூர், பெரியார் நகரில் நில எடுப்பு செய்து 93 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. தற்போது சில தடை கள் ஏற்பட்டுள்ளது. எனவே, வகை மாற்றம் செய்து தடைகளை அகற்றி வழங்கப்பட்ட பட்டாக்களை உறுதி செய்திட வேண்டும். அதேபோல அந்தியூர் மந்தை மாரியம்மன் கோவில் பகுதியில் வாழும் மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியு றுத்தி கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக் கும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினமாக சனியன்று (இன்று) நடைபெறும் போராட்டத் தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் பி.சுகந்தி, துணைத்தலைவர் யு.கே.சிவஞானம், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து  கொள்கின்றனர். இதனிடையே, வெள்ளி யன்று பட்டா வழங்க அனைத்து வட்டங்களி லும் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்க ளில் சிறப்பு முகாமிற்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மயானத்திற்கு செல்ல வழி கேட்டு சாலைமறியல்

தருமபுரி, செப்.29- அரூரில் மயானத்துக்கு வழிகேட்டு இறந்தவரை அடக்கம் செய்ய மறுப்பு தெரி வித்து, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட் டனர். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கெளாப்பாறையைச் சேர்ந்த சக்கு (61) என்ப வர் உயிரிழந்தார். இதனிடையே  மயானத் திற்கு செல்லும் பாதையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கம்பி வேலி அமைத்துள்ளார். இதனால், சக்குவின் உடலை அடக்கம் செல் வதற்கு மயானத்திற்கு எடுத்துச் செல்ல முடி யாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மயா னத்திற்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண் டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் அரூர் -  கீரைப்பட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும், சக்குவின் உடலை அவ ரது வீட்டின் அருகில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அரூர் துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், வட்டாட்சியர் பெருமாள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால்,  தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், 3 நாட்களுக்கு பிறகு, வெள்ளி யன்று அவரது உடலை அடக்கம் செய்தனர்.

டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம் கோபி நகராட்சி தலைவர் பேச்சு

கோபிசெட்டிபாளையம், செப்.29- டெங்கு நோய் பரப்பும் கொசுக்களை ஒழிக்க சுகாதார பணி யாளர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற கூட்டத்தில், தலைவர் நாக ராஜ் தெரிவித்தார். கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற சாதாரண கூட்டம் ஆணையர் சசிகலா முன்னிலையில், நகர்மன்ற தலைவர்  நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களின் பல்வேறு பிரச்ச னைகள் குறித்து தெரிவித்தனர். இதன்பின் நகர்மன்ற தலை வர் நாகராஜ் பேசுகையில், டெங்கு நோய்களை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மேலும், நக ராட்சி பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள போதுமான அளவில் மருந்துகள், புகை தெளிப்ப தற்காக தற்போது கூடுதலாக புதிய கருவிகள் வாங்கப்பட் டுள்ளது, என்றார். இக்கூட்டத்தில், கோபி நகராட்சி சுகாதார ஆய்வாளர், தூய்மை ஆய்வாளர் மற்றும் பொறியாளர் உள் ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் சேலம் ஆட்சியரின் அறை முற்றுகை

சேலம், செப்.29- பழிவாங்கும் நோக்கத்தோடு கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, சேலம் ஆட்சி யரின் அறையை 100க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலு வலர்கள் முற்றுகையிட்டனர். சேலம் மாவட்டம், சித்தர் கோவில் அருகே முருங்கப்பட்டி யில் மக்கள் சந்திப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. அப்போது மக்களிடம் மனு பெறவும், நல உதவிகள் வழங்க வும் இரண்டு அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டது. ஆட்சியர் செ.கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்தி பன், வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜா முத்து, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உள்ளிட்ட அதிகாரிகள் மேடை யில் இருந்தனர். இதனிடையே மக்களிடம் மனு பெரும்  நிகழ்வு தொடங்கும் முன்பு திமுக, அதிமுக ஆதரவாளர்கள் போட்டி போட்டு மேடைக்கு இருபுறமும் ஏறினர். இதில் பாரம் தாங்காமல் மேடை சரிந்தது. இதனால் நிலைகுலைந்த ஆட்சி யர் செ.கார்மேகம் கீழே சரிந்தார். எனினும், அதே மேடையில்  விழா நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், மேடை சரிவு எதி ரொலியாக முருங்கப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கண் ணன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து வருவாய் கோட் டாட்சியர் உத்தரவிட்டார். இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, சேலம் மாவட் டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் கள் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அறையை முற்று கையிட்டனர். மேலும், பழிவாங்கும் நோக்கத்கோடு பிறப் பிக்கப்பட்ட அவரின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய  வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் நிலம் அளவிடும் பணி உள்ளிட்ட அலுவலக பணிகள் பாதிக் கப்பட்டுள்ளன.

நிலக்கடலை ஏலம்

ஈரோடு, செப்.29- ஈரோடு மாவட்டம், சிவ கிரி ஒழுங்குமுறை விற் பனை கூடத்தில் நிலக் கடலை ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் 483 மூட்டை நிலக்கடலையை விற்ப னைக்கு கொண்டு வந்தி ருந்தனர். மொத்தம் 15 ஆயி ரத்து 50 கிலோ எடையுள்ள நிலக்கடலை, ரூ.10 லட்சத்து 81 ஆயிரத்து 577க்கு விற்ப னையானதாக ஏல அதிகாரி கள் தெரிவித்தனர்.