districts

img

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூன் 23- அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து கோவையில் வியாழ னன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவத்தில் ஒப்பந்த முறை யில் ஆட்களை சேர்க்கும் அக்னி பாத் திட்டத்தை கைவிட வலியுறுத் தியும், நாட்டின் பாதுகாப்பை கேள் விக்குறியாக்கும் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கோவை சிவானந்த காலனியில்  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சிபிஎம் கோவை மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் யு.கே. சிவஞானம் தலைமை தாங்கினார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், அமைப்புக்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என்.ஜெய பாலன், கே.அஜய் குமார், கே.எஸ். கனகராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். 

ஈரோடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்க லம் சமநகரில் மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு தாலுக்கா குழு உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். இதேபோல, புதுவடவள்ளியில் தண்ணீர்பள்ளம் கிளை செயலா ளர் பி.ஆனந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தாலுக்கா செயலாளர் கே.எம்.விஜ யகுமார்,  வட வள்ளி கிளை செயலா ளர் ஜெ.மைக்கேல்ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் வாழப்பாடி தாலுகா குழு சார்பில், பேருந்து நிலையம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் வி.பழனி முத்து தலைமை தாங்கினார். இதில், தாலுகா செயலாளர் வி.தங்கவேல், விவசாய சங்க நிர்வாகி அன்பழகன்  உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோ  கலந்து கொண்டனர்.  சேலம் தாலுகா எஸ்.கொல்லப் பட்டி பேருந்து நிலையம் அருகில் மர மங்களதுபட்டி 11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.பூங்கோதை தலை மையில் நடைபெற்ற கண்டன ஆர்ப் பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மேலவை சண்முகராஜா, மாவட்ட குழு உறுப்பினர் டி. பரமேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர்.