சேலம், ஜூலை 6- முந்தைய அதிமுக அரசால் புனையப்பட்ட இரண்டு பொய் வழக்குகளிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர், மாதர் சங்கத்தின் தலைவர்கள் புதனன்று விடுதலை செய்யப்பட்டனர். சேலம் வடக்கு மாநகரம், அஸ் தம்பட்டி பிரதான சாலையில் இயங்கி வந்த மதுக்கடையை மூடக் கோரி 2015 ஆம் ஆண்டு போராட் டம் நடைபெற்றது. இப்போராட்டத் தில் போலீசார் தடியடி நடத்தியதில் 10 பேர் காயமடைந்தனர். ஒருவ ருக்கு விரல் முறிந்தது. இருப்பி னும் போராடியவர்கள் மீது காவல் துறை பொய்வழக்கு புனைந்தது. ஏழு ஆண்டுகளாக சேலம் மூன்றா வது குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், புதனன்று தமிழக அரசின் உத்தரவின் அடிப் படையில் வழக்கை ரத்து செய்து அனைவரையும் விடுதலை செய் தது.
அதேபோல் சேலம் வடக்கு மாந கரம், பெரமனூர் பிரதான சாலை யில் இருந்த மதுக்கடையை அகற்றக்கோரி 2016 ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது. இதில் தடியடி நடத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க தலை வர்கள் மீது காவல் துறையி னர் பொய்வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக சேலம் மூன்றாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலை யில், தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் வழக்கை ரத்து செய்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். மேற்படி இரண்டு மதுக்கடை களையும் சில மாதங்களிலேயே நிரந்தரமாக மூடவைத்து போராட் டம் வெற்றி பெற்ற நிலையில், இரண்டு வழக்குககளில் இருந் தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதனன்று விடுதலை செய்யப்பட் டனர். முன்னதாக, இவ்வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள் எம்.வெற் றிவேல், சரஸ்வதி மற்றும் விடுத லைக்கு காரணமாக இருந்த அனை வருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகரக்குழு சார் பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.