பொள்ளாச்சி, டிச.21- ஆனைமலை வட்டத்திற்குட் பட்ட பழங்குடியின கிராமங்க ளுக்கு சமூதாய வன உரிமை வழங் குவதற்கான கூட்டு புல தணிக்கை யில் 15 கிராமங்கள் மட்டுமே பட்டிய லில் இடம்பெற்றுள்ளது. மீதமுள்ள பகுதிகளையும் இணைக்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மலைவாழ் மக்கள்சங்கம் வலியு றுத்தியுள்ளது. இதுகுறித்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக நேர்முக உத வியாளர் கு.வெங்கடாச்சலத்திடம், சிபிஎம் மற்றும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் தலைமை யில் பழங்குடியின மக்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, கோவை மாவட்டம், ஆனைமலை வட்டத்திற்கு உட்பட்ட, பொள் ளாச்சி, வால்பாறை, மானாம் போலி, உலாந்தி வனச்சரகத் திற்கு உட்பட்ட 18 வன கிராமங்க ளில் வாழுகிற பழங்குடி மக்கள் சமுதாய உரிமை பெறுவதற்காக கோவை மாவட்ட ஆட்சியரின் ஆணையின் பேரில், சிறுவன மக சூல் சேகரிப்பு உற்பத்தி இடங் களை பார்வையிட்டு, வனத்துறை யும் வருவாய்த் துறையினரும் இணைந்து கூட்டு புலத் தணிக்கை செய்ய உத்தரவிட்டதுள்ளது.
பழங்குடியின மக்களின் நீண்ட கால போராட்டத்திற்கு தீர்வு கிடைத் துள்ளதாக கருதுகிறோம். இதற் காக தமிழக அரசிற்கு நன்றி தெரி வித்துக்கொள்கிறோம். அதேநேரத் தில், இந்த கூட்டு புல தணிக்கை யின் பணிகள் 15 கிராமங்களில் மட் டும் தொடங்கி இருக்கிறது. இதில், சின்னார் பதி, பழைய சர்க்கார் பதி, தம்மம்பதி ஆகிய மூன்று வன கிராமங்கள் கூட்டு புல தணிக்கை செய்யும் பட்டியலில் இருந்து விடு பட்டுள்ளது. இந்த பழங்குடியின கிராமங்களையும் இதில் இணைத்து பணிகளை மேற்கொள்ள வலியு றுத்தப்பட்டது. இம்மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள், இம்மனு வின் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என உறுதியளித் தனர். முன்னதாக இந்த மனு அளிக் கும் இயக்கத்தில், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் ஆனைமலை தாலுகா செயலாளர் வி.எஸ்.பரம சிவம், தாலுகாகுழு உறுப்பினர்கள் பி.பி.மகேந்திரன், எஸ்.சரிதா மற் றும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அம்சால், ஊர் மூப்பன் மயிலான் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.