அவிநாசி,டிச.17- அவிநாசி அருகே பெரியாயிபா ளையம் வாரச்சந்தையினை சீரமைத்து தர கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட பெரி யாயிபாளையத்தில் வாரச்சந்தை சனிக் கிழமை தோறும் செயல்படுகிறது. இந்த வார சந்தையில் 100 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இக்கடைகளை ஊராட்சி நிர்வாகம் சார்பில் வருடம் தோறும் ஏலம் விடப்பட்டு, கடை ஒன் றிற்கு குறிப்பிட்ட ரூபாய் வசூலிக்கப்ப டும். இந்த நிலையில் பழங்கரை ஊராட் சிக்குட்பட்ட தேவம்பாளையம், பச்சா பாளையம், அவிநாசிலிங்கம் பாளை யம், உள்ளிட்டு அருகில் உள்ள கிராமத் தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பொது மக்கள் காய்கறிகள், பழங்கள் வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ள னர். இந்நிலையில் வாரச்சந்தை அமைந் துள்ள இடத்தில், செடிகள் படர்ந்தும், நீர்கள் தேங்கி உள்ளது. இதன் கார ணமாக வியாபாரிகள் சாலையோரத் தில் இருபுறமும் கடைகளை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இத னால் கனரக வாகன முதல் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் வரை சாலையில் சென்று வர முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரி வித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை. உடனடியாக மாவட்ட நிர்வாகம் சீரமைத்து தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரியா யிபாளையம் கிளை சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.