ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில், தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து கோவை சிவானந்தகாலனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.சாமிநாதன் கண்டன உரையாற்றினார். இதில், திரளானோர் பங்கேற்றனர்.