தருமபுரி, ஜன.3- பாலக்கோடு வட்டம். கல்லாங்காட்டனூர் கிராமத்தில் கள் ளத்தனமாக செயல்படும் மதுக்கடையை அகற்ற கோரி அக் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கல்லாங்காட்ட னூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர், ஊரையொட்டி 10 சென்ட் நிலத்தை வாங்கி அந்த இடத்தில் சீட்டால் ஆன செட் ஒன்றை அமைத்து அங்கு கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்து வருகிறார். அதே இடத்தில் திறந்தவெளி பாரும் நடத்தி வருகிறார். இங்கு பெரும் அளவில் காலை நேரத்திலேயே மதுப்பிரியர்கள் கூடுவதால் அப்பகுதி மக்கள் சாலை யின் வழியே விவசாய நிலத்திற்க்கு செல்வோர் சிரமத் திற்குள்ளாகின்றனர். மேலும் இந்த மதுபான கடையால் அப்பகுதியில் திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. இந்த மதுக்கடையால் பெண்க ளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே கள்ளத்தனமாக செயல்படும் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட் டுள்ளனர்.