districts

img

திருப்பூரில் குவிந்து கிடக்கும் பிரச்சனைகளை முதல் மாமன்ற கூட்டத்தில் கொட்டிய கவுன்சிலர்கள்

திருப்பூர், மார்ச் 21- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடி வடைந்து புதிய மாமன்றம் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள நிலையில் திருப் பூர் மாநகராட்சி மாமன்ற முதல் கூட்டம்  திங்களன்று நடைபெற்றது. இக்கூட் டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினர்களும் நகரில், வார்டுகளில் குவிந்து கிடக்கும் மக்கள் பிரச்சனைகளை கொட்டித் தீர்த்தனர். திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ந.தினேஷ்குமார் தலை மையில் திங்களன்று காலை தொடங்கி யது. மாநகராட்சி ஆணையர் கிராந்தி  குமார் பாடி, துணை மேயர் பாலசுப்பிர மணியம் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 60 வார்டுகளின் மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மேயர் தினேஷ் குமார் முதலில் இரண்டு தீர்மானங் களை முன்மொழிந்தார். உள்ளாட்சி  தேர்தலை சிறப்பாக நடத்தி, 9 மாதங்க ளில் தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கு நன்றி தெரிவித்தும், திருப்பூர் மாநகராட்சியில் அடிப்படை வசதி களையும், புதிய வளர்ச்சித் திட்டங்க ளையும் தொலை நோக்கு பார்வையோ டும், வெளிப்படைத் தன்மையான நிர் வாகத்தையும் வழங்கி புதிய தூய்மை யான நகரமாக திருப்பூர் மாநகரத்தைக்  கட்டமைக்க உறுதியளித்து மாநகர மக் களுக்கு நன்றி தெரிவித்தும் இத்தீர்மா னங்கள் கொண்டு வரப்பட்டது.

அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினர் களும் இதை ஏற்றுக் கொண்டு தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுகவை சேர்ந்த வி.ராதாகிருஷ்ணன், இல. பத்மநாபன், அதிமுகவை சேர்ந்த அன் பகம் திருப்பதி, காங்கிரஸ் கட்சி சார் பில் செந்தில்குமார், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் எஸ்.ரவிச்சந்தி ரன், மதிமுக ஆர்.நாகராஜன், மார்க் ்சிஸ்ட் கட்சியின் ஆர்.மணிமேகலை  உள்ளிட்ட அனைத்து வார்டு உறுப்பி னர்களும் தங்களது வார்டு மற்றும் பொதுவான நகரம் சார்ந்த பிரச்சனை கள் குறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். குறிப்பாக நகரில் குடிநீர் பிரச் சனை கடுமையாக உள்ளதை அனைத்து உறுப்பினர்களும் சுட்டிக் காட்டினர். 20 நாட்களில் இருந்து 10  நாட்களுக்கு ஒரு முறை மட்டும் குடிநீர் கிடைக்கும் நிலை உள்ளது. எனவே  குறைந்தபட்சம் 4 முதல் 8 நாட்களுக்கு  உள்ளாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று அனைவரும் வற்புறுத்தினர்.

அதேபோல் சொத்து வரிக்கு சம மாக குப்பை வரியையும் நிர்ணயித்து  அதை இரண்டையும் சேர்த்து நான் கைந்து ஆண்டு பாக்கியை மொத்த மாக செலுத்த வேண்டும் என்று மாநக ராட்சி நிர்வாகத்தினர் வலியுறுத்துகின் றனர். மாநகராட்சிக்கு நிதித் தேவை இருக்கும் நிலையில் சொத்து வரி, குப்பை வரியை தனித்தனியாக பிரித் தால் சொத்து வரியை மட்டும் செலுத்தி  விடுவார்கள். மேலும் கடுமையான அளவுக்கு அதிகமாக நிர்ணயிக்கப் பட்டு உள்ள குப்பை வரியை குறைக்க  வேண்டும் என்றும் உறுப்பினர்கள் வலி யுறுத்தினர். அதேபோல் நகரில் குப்பைகள் பல பகுதிகளிலும் மலை போல் தேங்கி இருப்பதுடன், சுகாதார சீர்கேடு ஏற்ப டுத்தி வரும் பிரச்சனைக்கும் உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி னர்.  நகரின் பல பகுதிகளில் பாதாளச் சாக்கடை, நான்காவது குடிநீர் திட்டப் பணிகளுக்காக சாலைகளைத் தோண்டியதால் குண்டும், குழியுமாக  போக்குவரத்துக்கு லாயக்கில்லாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்ற னர். இந்த சாலைகளை முழுமையாக செப்பனிட வேண்டும் என்றும் உறுப் பினர்கள் வலியுறுத்தினர். நகரின் பல்வேறு பகுதிகளில் சாக் கடை கால்வாய்கள் முழுவதும் சாலை, சாக்கடைப் பணிக்காக தோண் டப்பட்ட மண் கொட்டிக் கிடக்கிறது. இதனால் நீர் வெளியேறுவதில்லை. கால்வாய்கள் பல பகுதிகளிலும் அடைத்துக் கிடக்கின்றன. கழிவுநீர் சாக்கடைகளில் அடைத்துள்ள மண்ணை அகற்றி, கழிவுநீர் வெளியே றிச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அனைத்து வார்டுகளிலும் குப்பை  அகற்றம், கழிவுநீர் வடிகால் சுத்தப்ப டுத்துவது ஆகிய பணிகளுக்குப் போதிய எண்ணிக்கையில் தூய்மைப் பணியாளர்கள் இல்லை. எனவே அனைத்து வார்டுகளிலும் அங்கு வாழக்கூடிய மக்கள் தொகை கணக்கிற்கு ஏற்ப போதுமான பணி யாளர்கள் நியமிக்க வேண்டும் என்று  கேட்டுக் கொண்டனர். நகரில் உற்பத்தியாகும் குப்பை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண நட வடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ் வொரு வார்டிலும் செய்ய வேண்டிய பணிகளுக்கு நிதி தேவை அதிகமாக உள்ளது என்றும் கூறினர். அதேபோல் மாநகராட்சி பள்ளிகளுக்கு தூய்மைப் படுத்த ஒப்பந்த அடிப்படையில் பணி யாளர் நியமிப்பதற்கு மாத ஊதி யத்தை அதிகரிக்க வேண்டும், மேல் நிலைப் பள்ளிக்கும் தூய்மைப் பணி யாளர் நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். ஆறாண்டுகளுக்குப் பிறகு தேர் தல் நடைபெற்று மாமன்ற உறுப்பினர் கள் புதிதாக வெற்றி பெற்று வந்தி ருக்கும் நிலையில் மக்களிடம் எதிர் பார்ப்பு மிகப்பெரும் அளவுக்கு உள் ளது. எனவே உடனடியாக பிரச்சனைக ளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் ஏறத்தாழ அனைத்து மாமன்ற உறுப்பி னர்களும் கேட்டுக் கொண்டனர். கோடை காலம் வர உள்ள நிலையில் குடிநீர் பிரச்சனைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அனைத்து சாலை களையும் செப்பனிட வேண்டும் என் றும் வலியுறுத்தப்பட்டது. மாமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய இப்பிரச்சனைகள் தொடர்பாக மாநக ராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி, மேயர் தினேஷ்குமார் ஆகியோர் பதில்  அளித்தனர். மக்கள் ஐந்தாண்டுக ளுக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். எதிர் பார்ப்பு அதிகமாக உள்ளது. உரிய முறையில் கவனம் செலுத்தி வெளிப்ப டையான நிர்வாகத்துடன் திருப்பூர் மாநகராட்சியை தமிழகத்தில் முன் னோடி மாநகராட்சியாக மாற்ற செயல் படுவோம் என்று மேயர் தினேஷ்குமார் கூறினார்.

சலசலப்பு

கூட்டம் தொடங்கி மேயர் முன் மொழிந்த இரு தீர்மானத்தின் மீது  பேசிய அதிமுக உறுப்பினர் அன்பகம் திருப்பதி நீண்ட நேரம் பேசிக் கொண் டிருந்தார். அப்போது இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினர் எஸ்.ரவிச் சந்திரன், காங்கிரஸ் உறுப்பினர் கே.பி.ஜி. செந்தில்குமார் ஆகியோர் குறுக் கிட்டு தீர்மானத்தின் மீது மட்டும் பேச  வேண்டும், மற்ற விசயங்களை அந் தந்த தீர்மானத்தின்போது பேச வேண் டும் என்று கூறினர். இதற்கு திருப்பதி  பதிலளிக்கவும் மாறி மாறி மற்ற உறுப் பினர்களும் எதிர்த்து பேசவும் மன்றத் தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட் டது. மன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர் மானப் பொருள்கள் அடுத்தடுத்து முன் வைக்கப்பட்டபோது காய்கறி சந்தை  மற்றும் மீன் சந்தை ஆகியவற்றை இரு வர் மட்டும் ஏலம் கோரி இருப்பதை ஒத்தி வைக்க வேண்டும் என்று உறுப் பினர்கள் வலியுறுத்தினர். அதை ஏற்று  தற்போது உள்ள ஏலதாரருக்கு கால அவகாசம் நீடித்து, அந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னர் எஸ்.ரவிச்சந்திரன் பேசும்போது, திருப்பூர் திரையரங்கில் அமைதியை யும், நல்லிணக்கத்தையும் சீர்குலைக் கும் விதத்தில் மதவாத கும்பல் திரை யரங்கிற்குள் உறுதிமொழி எடுத்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தது டன், அது குறித்து நடவடிக்கை எடுக்க வும், மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் வலியுறுத்தி னார். முதல் முறையாக நடைபெற்ற கூட்டம் என்பதால் அனைவருக்கும்  பேச வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் காலை 10.30 மணியளவில் கூடிய இக் கூட்டம் பிற்பகல் சுமார் 2.45 மணியள வில் நிறைவடைந்தது.