districts

img

குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுக்கான மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளதாக கவுன்சிலர்கள் தகவல்

அவிநாசி, பிப்.29 குடிநீர் தரத்தை ஆய்வு செய்து பொது மக்களுக்கு சுவைப்பு தன்மை யோடு குடிநீர் வழங்குவது குறித்து வலி யுறுத்த மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளதாக அவிநாசி பேரூராட்சி கவுன் சிலர்கள் முடிவு செய்துள்ளனர். அவிநாசி பேரூராட்சியில் மொத்தம்  18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நான்காவது குடி நீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோ கம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலை யில், சமீப நாட்களாக தண்ணீரின் சுவைப்பு தன்மை குறைந்துள்ளது என்று பொதுமக்கள் புகார் கூறுகின்ற னர். பேரூராட்சி நிர்வாகமும் தண்ணீரை  சரி செய்வதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர்.  இந்நிலையில், அவிநாசி பேரூ ராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலை வர் தனலட்சுமி பொன்னுச்சாமி தலை மையில் வியாழக்கிழமை நடைபெற் றது. இதில் பிரதான பிரச்சனையான குடி நீர் பிரச்சனை குறித்து பேசப்பட்டது. இப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் 18 வார்டுகளை சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலர்களை அழைத்து குடிநீர் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். நான்காவது குடிநீர் திட்டம் மூலம் வீடு களுக்கு வழங்கப்படும் தண்ணீர் சுவைப்புத்தன்மையோடு வழங்க கோரிக்கை வைக்க வேண்டும். நிரந்தர மான பேரூராட்சி செயல் அலுவலர் நிய மிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந் தித்து வலியுறுத்த வேண்டும் என கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் தெருநாய்கள் தொல்லைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.