districts

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: பால் உற்பாத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

ஈரோடு, அக்.3- கால்நடைகளுக்கு தேவை யான தீவனங்களின் விலை, பல மடங்கு உயர்ந்துள்ளதால், பால் கொள்முதல் விலையை லிட்ட ருக்கு, 10 ரூபாய் வீதம் உயர்த்த வேண்டும் என பால் உற்பாத்தியா ளர்கள் சங்கம்  வலியுறுத்தி யுள்ளது.  இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் ஏ.எம்.முனுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழ கத்தில், 9,200 ஆரம்ப பால் உற்பத்தி யாளர்கள் சங்கம் மூலம், 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் தினமும், 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் வழங்கி வருகின்றனர். பால் உற்பத்தியாளர்களின் தொடர் போராட்டத்தால், பால் கொள்மு தல் விலை லிட்டருக்கு, 3 ரூபா யும், ஊக்கத்தொகையும் ஆவின் நிறுவனம் வழங்கி வந்தது. பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை, குறைந்த பட்ச நிவார ணமாக இருந்தது. தற்போது, கால்நடைகளுக்கு தேவையான தவிடு, புண்ணாக்கு, பருத்தி கொட்டை, கலப்பு தீவ னங்கள் பல மடங்கு விலை உயர்ந் துள்ளது. எனவே, பால் கொள் முதல் விலையை லிட்டருக்கு, 10 ரூபாய் வீதம் உயர்த்த வேண்டும். மேலும், ஏற்கனவே வழங்கி வந்த ஊக்கத்தொகையை கடந்த 3 மாதங்களாக ஆவின் நிர்வாகம் வழங்காமல் இழுத்தடிப்பது, பால் உற்பத்தியாளர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.  ஆவின் கலப்பு தீவன ஆலை செயல்படாத நிலையில், ஒரு மாத மாக கலப்பு தீவனம் நிறுத்தப்பட் டுள்ளது. ஆவின் கலப்பு தீவ னத்தை பயன்படுத்தி வந்தவர்கள். வேறு தீவனங்களை வாங்கி பயன் படுத்தும்போது சிரமம் ஏற்படுகி றது. ஆவின் நிர்வாகத்தில் இருந்து வாரம் ஒரு முறை ஆரம்ப சங்கங்க ளுக்கு, கால்நடை மருத்துவர் வந்த நிலையில், உரிய மருந்து இல்லா ததால், தனியார் மருத்துவர்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட் டுள்ளது. கால்நடைகளுக்கு மருத் துவம் பார்க்க கூடுதல் செலவு செய்யும் நிலையில் பால் உற்பத்தி யாளர்கள் உள்ளனர். எனவே, ஆவின் நிர்வாகம், ஊக்கத்தொகையை உடன் வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் வீதம் உயர்த்த வேண்டும். ஈரோட் டில் செயல்படாமல் உள்ள கலப்பு தீவன ஆலையை உடன் திறந்து, உற்பத்தியை துவக்கி, தட்டுப்பாடு இல்லாமல் கலப்பு தீவனம் வழங்க வேண்டும். கால்நடை மருத்துவர்க ளுக்கு தேவையான மருந்துகளை வழங்கி, ஆரம்ப சங்கங்களுக்கு அனுப்பி, மருத்துவ வசதி செய்து தர ஆவின் நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  இதேபோன்று, தமிழக விவசா யிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாடு அரசின் ஆவின் நிறுவ னத்திற்கு பால் ஊற்றி வரும் விவசாயிகளுக்கு கடந்த மூன்று மாதமாக நிலுவையில் உள்ள ரூ.100 கோடிக்கும் மேற்பட்ட ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இல்லையென்றால் சென்னையில் உள்ள ஆவின் தலை மையகத்தின் முன்பு காலவரை யற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள் ளார்.