districts

மாநகராட்சி சுவர்கள் சித்திர சுவர்களாக மாற்றப்படும்

சேலம், செப்.21- சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களிலுள்ள சுவர்கள், வண்ணமிகு சித் திர சுவர்களாக மாற்றப்படும் என மாநக ராட்சி மேயர் ராமச்சந்திரன் உறுதியளித் துள்ளார். சேலம் புதிய பேருந்து நிலைய சுற் றுச்சுவரில் ஒட்டப்பட்ட சுவரொட்டி களை அழித்தல், குப்பைகளை அகற்று தல், தரையினை சுத்தம் செய்தல், பாட் டில்கள் சேகரித்தல் போன்ற தூய்மைப்  பணிகளை மேயர் ஆ.ராமச்சந்திரன் வெள்ளியன்று துவக்கி வைத்தார். இதன்பின் அவர் கூறுகையில், அக்.2  ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநா ளில் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு பெறுகி றது. தூய்மையே சேவை என்ற நோக் கில், சேலம் மாநகராட்சியில் இப்பணி கள் தொடா்ந்து நடைபெற நடவடிக்கை  மேற்கொள்ளப்படும். தூய்மைப் பணி கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், பிரசாரங்களும், பள்ளி,  கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப் புணர்வு பேரணியும் மாநகராட்சிப் பகுதி களில் நடைபெற்று வருகிறது. மேக்ஸி  விஷன் கண் மருத்துவமனை நிர்வாகம்,  பூங்கா சுற்றுச்சுவர், புதிய மற்றும் பழைய பேருந்து நிலைய சுவர்கள், அப் சரா பாலம் போன்ற இடங்களில் உள்ள  சுவர்களை வண்ணமிகு சித்திர சுவர்க ளாக மாற்றியமைக்க தாமாகவே முன் வந்துள்ளது. இதுபோன்ற பொது இடங் களில் உள்ள சுவர்களில் வண்ணமிகு சித்திர சுவர்களாக மாற்றியமைக்க தக்க  நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் மா.சாரதா தேவி, மாநகர நல அலுவலர் ஆ.மோகன், சூரமங்கலம்  உதவி ஆணையர் எஸ்.எ.சுரேஷ்குமார், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய் வாளர்கள், மாநகராட்சி தூய்மைப் பணி யாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.