districts

ஆகஸ்ட் 15-இல் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு சாத்தியமில்லாதது விஞ்ஞானிகள் எச்சரிக்கை

புதுதில்லி, ஜூலை 6 கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக் குள் அறிமுகப்படுத்தும் ஐசிஎம்ஆர் முயற்சி சாத்தியமற்றது, நடை முறைக்கு வராத ஒன்று என்று தி இந்தி யன் அகாதெமி ஆஃப் சயின்ஸ் அமைப்பு (ஐஏஎஸ்சி) கருத்துத் தெரிவித்துள் ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கொரேனா வைரசுக்கு எதிரான கோவாக்சின் என்ற பெயரில் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த நிலையில் அறிவியல் விஞ்ஞானிகள், ஆராய்ச்சி உறுப்பி னர்களைக் கொண்டிருக்கும் இந்திய அகாடமி ஆஃப் சயின்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது: கொரோனா வைரஸ் தடுப்பு மருந் துக்கு எந்தவிதமான கேள்வியும் அவ சரத் தேவையில்லாத நிலையில், மனி தர்களுக்குத் தேவைப்படும் இந்த மருந்து முறைப்படி கிளினிக்கல் பரி சோதனையைப் படிப்படியாகக் கடந்துதான் வர வேண்டும். மருந்து கண்டுபிடித்தலுக்கு நிர் வாக ரீதியான ஒப்புதல்களை விரைவு படுத்தலாம். ஆனால், அறிவியல் ரீதி யிலான பரிசோதனைகள், விவரங்க ளைச் சேகரித்தல் போன்றவை இயல் பான, இயற்கையான நேரத்தில்தான் சேகரிக்க முடியும்.

இதை அவசரகதி யில் நமது தேவைக்கு ஏற்ப, அறிவிய லின் கடுமையான தரத்தை சமரசம் செய்துகொள்ள முடியாது. ஐசிஎம்ஆர் நிர்ணயித்துள்ள ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் வைரஸ் தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரி சோதனையை முடித்து அறிமுகம் செய்வது என்பது சாத்தியமற்றது. இந்தக் காலக்கெடு நடைமுறைக்கு வராத நம்பிக்கையையும், எதிர்பார்ப்பு களையும் நமது மக்களின் மனதில் ஏற்படுத்திவிடும். கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம். சர்வதேச அள வில் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறை களுக்கு உட்பட்டு, கொரோனா வைர சுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டு பிடிக்க வேண்டும். கொரேனா வைரஸ் தடுப்பு மருந் தின் பாதுகாப்பு எவ்வாறு இருக்கிறது என்பது முதல் கட்டப் பரிசோதனை யிலும், இரண்டாவது கட்டத்தில் அந்த மருந்தின் செயல்திறன், பக்க விளைவு கள் ஏதேனும் வெவ்வேறு அளவுகளில் கொடுத்தால் வருகிறதா என்பதையும் கண்டறிய வேண்டும். மூன்றாவது கட்டத்தில் தடுப்பூசி யின் பாதுகாப்பு மற்றறும் செயல்திறன் ஆகியவற்றை ஆயிரத்துக்கும் மேற் பட்ட ஆரோக்கியமான உடல்நிலை கொண்டவர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்க வேண்டும்.

இதுதான் முறையாகும். இந்த கிளினிக்கல் பரிசோதனை யில் பங்கேற்கும் தன்னார்வலர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். பரிசோதனை யைத் தொடங்குவதற்கு முன் பல்வேறு தார்மீக, மருத்துவ ரீதியான ஒப்புதல் களைப் பெறுவதும் அவசியம். ஒருவருக்கு உடலில் மருந்தை ஏற்றிப் பரிசோதித்தால், அதன் விளைவு தெரிவதற்கு பல வாரங்கள் ஆகும். அப்படியிருக்கும்போது அவசரப் பட்டு விரைவாக விவரங்களைச் சேக ரிக்க முடியாது. ஒரு கட்டத்தில் கிடைத்த புள்ளிவிவ ரங்களைத் தீவிரமாக ஆய்வு செய்த பின்புதான் அடுத்தகட்டப் பரிசோத னையைத் தொடங்க முடியும். முதல் கட்ட ஆய்வில் விவரங்கள் சரியாக வர வில்லையென்றால், ஏற்கமுடியாத நிலையில் இருந்தால், உடனடியாகப் பரிசோதனையை நிறுத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம். உதாரணமாக, முதல்கட்டப் பரி சோதனையில் கிடைத்த தரவுகள்படி தடுப்பு மருந்து பாதுகாப்பானது இல்லை எனத் தெரியவந்தால், இரண் டாவது கட்டப் பரிசோதனைக்குள் செல்ல முடியாது. அந்தத் தடுப்பு மருந்து நிறுத்தப்படும்.  கடுமையான விஞ்ஞான செயல் முறைகள் மற்றும் தரத்தில் சமரசம் செய்துகொண்டு எடுக்கக்கூடிய எந்த வொரு அவசர முடிவும், மக்கள் மீது எதிர்பாராத அளவில் நீண்டகால பாத கமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்’’. இவ்வாறு இந்தியன் அகாடமி ஆஃப் சயின்ஸ் தெரிவித்துள்ளது.