districts

ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: லஞ்சம் பெற்ற காவலர்கள் கைது

சேலம், டிச.21- ரேசன் அரிசி கடத்தல் விவகாரத் தில், லஞ்சம் பெற்ற உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு பெண் காவலர் உட்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், நாழிக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்  பிரபாவதி தன்னிடம், “மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, ரேசன் அரிசி கடத்தி விற்பனை செய்து கொள்ளலாம்” என்றும். “இதுதொடர் பாக வழக்குப்பதிவு ஏதும் செய்ய மாட் டோம்” என்றும் கூறுகின்றனர். எனவே  லஞ்ச பணம் கேட்கும் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்து. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதை ஏற்று, ஒரு வருக்கு போன் செய்து தங்கராஜ் பேசி யதாக கூறப்படுகிறது. அப்போது அந்த காவலர், நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த இடைத்தரகர் குமரேசன் என்பவர், கந் தம்பட்டி நெடுஞ்சாலைக்கு வருவார். அவரிடம் பணத்தை கொடுங்கள் என்று  கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் பேரில், ரசாயனம் பவுடர் தடவிய 10 ஆயி ரம் ரூபாயை தங்கராஜ், கந்தம்பட்டி நெடுஞ்சாலை பகுதிக்கு கொண்டு சென் றார். அப்பொழுது அங்கு வந்த இடைத் தரகர் குமரேசன் என்பவரிடம், தங்கராஜ் தான் வைத்திருந்த பணத்தை கொடுத் தார். அப்போது அப்பகுதியில் மறைந்தி ருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கும ரேசனை கையும் களவுமாக பிடித்த னர். இதன்பின் அவரை கைது செய்து விசாரித்த பொழுது, உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் பணி யாற்றும் பிரபாவதி, மணி ஆகியோர்  கூறியதன் பேரில், தங்கராஜிடம் பணத்தை பெற்றதும், அவர்களுக்கு இடைத்தர கராக குமரேசன் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவ லர் பிரபாவதி மீது ஆய்வாளர் நரேந்தி ரன் வழக்குப்பதிவு செய்து இருவரை யும் கைது செய்தனர். மேலும், உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத் திற்கு சென்று அங்கு விடிய விடிய சோதனை நடத்தினர். இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.