உடுமலை, ஜன.7- உடுமலையில் ஓய்வூதி யர் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக்குழு சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்துக் கழகத் தில் ஓய்வுபெற்ற ஓய்வூதி யர்களுக்கு கடந்த பல வரு டங்களாக உயர்த்தப்பட்ட பஞ்சப்படியை தமிழக அரசு வழங்காத தைக் கண்டித்து, ஓய்வூதிய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, ஒருங்கிணைப்புக்குழு தலைவர் செல்லத்துரை தலைமை வகித்தார். போக்கு வரத்து கழக ஓய்வூதியர் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் சேதுராமன் சிறப்புரை யாற்றினார். இதில் தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத் தலைவர் தாசன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கச் செயலாளர் சின்னசாமி, மின்வாரிய ஓய்வூதியர் சங்கச் செயலாளர் கிருஷ்ணகுமார், அஞ்சல் துறை ஓய்வூதியர் சங்க மாநில இணைச்செயலாளர் ஜவகர் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில், போக்குவரத்து ஓய்வூதியர் சங்க உடுமலை தலைவர் நாச்சிமுத்து நன்றி கூறினார்.