districts

img

மதுக்கரை சாலையை 6 வழிச்சாலையாக மாற்றிடுக

கோவை, பிப்.26- நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை யுள்ள சாலையை ஆறு வழிச்சாலை யாக மாற்றக்கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் நடைப்பய ணம் மேற்கொண்டனர். கோவை மாவட்டம், நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை 28 கி.மீ தூரத் திற்கு உள்ள எல்.அன்ட்.டி இரு வழி நெடுஞ்சாலையை, 6 வழிச்சா லையாக ஒன்றிய அரசு விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி யின் சார்பில் நடைபயணம் மேற் கொள்ளப்பட்டது. பாலத்துரை ரோடு ஜங்சன் பகுதியில் துவங்கிய இந்த நடைபயணம் நீலாம்பூர் பகுதியில் நிறைவடைந்தது. இதில், அக்கட்சி யின் பொதுச்செயலாளரும்,சட்ட மன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வ ரன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறு கையில், நீலாம்பூரிலிருந்து மதுக்க ரை வரை உள்ள சாலை பல வரு டங்களாக இரு வழிச்சாலையா கவே இருப்பதால் பெரும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. நீலாம் பூர் அருகே உள்ள சேலம் மற்றும் கொச்சின் செல்லும் சாலைகள் ஆறு வழிச்சாலையாகவும் இருக்கின்ற நிலையில், இடைப்பட்ட பகுதியில் இருவழிச்சாலையாக இருக்கிறது. எனவே, இடைப்பட்ட இந்த பகுதி யும் ஆறு வழிச்சாலையாக மாற்றப் பட்டால் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகள் இல்லா மலும் பயணிக்க இயலும், என்றார். மேலும், 1992 ஆம் ஆண்டில் இச்சாலை பணிகள் துவங்கப்பட்ட பொழுது, அன்றைய நாட்களில் இச் சாலை போதுமானதாக இருந்தது. தற்பொழுது 30 ஆண்டுகள் ஆன நிலையில் வாகனங்களின் எண் ணிக்கை அதிகமானதை கருத்தில் கொண்டு இதனை 6 வழிச்சாலை யாக ஒன்றிய அரசு மாற்ற வேண்டும். இதுகுறித்து ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரிடமும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை கேள்வி எழுப்பி உள்ளதாகவும் அவர் தெரி வித்தார்.