சேலம், ஆக.22- தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி சேலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் முகமூடி அணிந்து நூதன முறையில் மாநகராட்சியில் மனு அளித்தனர். சேலம் மாநகரில் பல்வேறு பகு திகளில் தெரு நாய் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற் பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவ டிக்கை எடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகரச் செயலாளர் என். பிரவீன் குமார் தலைமையில், நாய் முகமூடி அணிந்து நூதன முறை யில் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா ளர் பிரவீன் குமார் கூறுகையில், சேலம் மாநகரில் அடிப்படை வசதி கள் உள்ளிட்ட எந்த வசதியும் நிறை வேற்றப்படாமல் உள்ளது. குறிப் பாக அனைத்து இடங்களிலும் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறது. இதனால், பேருந்து நிலையத்திற்குள் வருகிற பயணிகளுக்கு பெரும் அச்சுறுத் தல் ஏற்படுகிறது. எனவே, சேலம் மாநகராட்சி உடனடியாக தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண் டும். இல்லையெனில் அடுத்த கட்ட மாக மக்களை திரட்டி பெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட் டுள்ளதாக தெரிவித்தார்.